Sunday 19 February 2017

#உன் மீது பெலவீனங்களையும் நோய்களையும் #சுமத்தியது,கர்த்தர் #அல்ல உனக்காக பெலவீனங்களையும் நோய்களையும் #சுமந்து தீர்தவரே #கர்த்தர்.

***********************************

வியாதி என்றும் இருளின் பிடியில் இருக்கும்,என் அன்பு சகோதரா,அன்பு சகோதரி நீ வியாதியின் இருப்பது,தேவனின் விருப்பமல்ல,அது சாத்தானின் விருப்பம்,நீ வாழ்ந்து சுகமாய் இருக்க வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்..

இருளாகிய வியாதிக்கு காரணம்
ஒளி இல்லை..ஒளிக்கும்,இருளுக்கும் வித்தியாசத்தை நீ புரிந்து கொள்...

இயேசு ஒளியாகவே இருக்கிறார் அவரிடம் எவ்வளவேனும்,இருள் இல்லை,
இதை உள்ளத்தில் நீ உணர்ந்து கொள்...

நீ வியாதியால் கஷ்டப்படுகிறதுக்கு காரணர் கர்த்தர் அல்ல,உனக்காக கஷ்டங்களை கல்வாரியில் ஏற்றவரே  கர்த்தர்...

உன்னை காயப்படுத்துவது கர்த்தர் அல்ல,
உனக்காக காயப்பட்டவரே  கர்த்தர்..

உன் மீது பெலவீனங்களையும் நோய்களையும் சுமத்தியது,கர்த்தர் அல்ல
உனக்காக பெலவீனங்களையும் நோய்களையும் சுமந்து தீர்தவரே கர்த்தர்..

ஆம் என் அன்பு சகோரா! சகோதரி!

இதை நீ நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்..

நீ வியாதியாய் இருக்கும் போது உன் வியாதியை பற்றி நினைத்து நினைத்து கலங்காதே...

உன் பிரச்சினை யாரிடமும் சொல்லி சொல்லி புலம்பாதே...

மற்றவரின் ஆறுதலை தேடி அங்கும் இங்கும் அலையாதே...

உன் பிரச்சினைக்கு தீர்வு,ஆறுதல் நிறைந்த மனிதனுடைய அற்ப வார்த்தையில் இல்லை...

அது வல்லமை நிறைந்த தேவனுடைய ஜீவ வார்தையில் இருக்கிறது...

அந்த ஜீவ வார்த்தை சொல்கிறது:நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் நான் உனக்கு சவுக்கியமும், ஆரோக்கியமும் வரப்பண்ணி உன்னை குணமாக்கி உனக்கு பரிபூரண சமாதானத்தை வெளிப்படுத்துவேன். நான் எனது வசனத்தை அனுப்பி உங்களை குணமாக்கி அழிவுக்கு தப்பிவிப்பேன்

அந்த வசனம்(வார்த்தை)மனிதனாக வந்தார் அவர் ஆதியும் அந்தமுமானவர்

உன் பெலவினங்களை ஏற்றுக்கொண்டு உன் வியாதிகளை சுமந்து தீர்த்தவர்...

துவக்கமும் முடிவுமானவர்,
உன் துக்கங்களை சுமந்து தீர்த்தவர்...

கடவுளோடு கடவுளாக இருந்தவர்,
உன் கஷ்டங்களை கல்வாரியில் சுமந்தவர்...

அவர்தான் இயேசு கிறிஸ்து,
அவர்தான் உனது பரிகாரி...

ஆம் அவரே! உன் பரிகாரி,
எனவே இந்த நெடியிலிருந்து
இயேசுவே என் பரிகாரியாகிய கர்த்தர் என்று அடிக்கடி உன் வாயினால் அறிக்கையிடு...

இயேசுவின் தழும்புகளால் நான் சுகமானேன்,என்று நீ சுகம் பெறும் வரைதேவனை நோக்கி துதியுடன் முறையிடு...

நிச்சயமாக நீ பெறுவாய் சுகம் ...
சத்தியமாக நீ பெறுவாய் விடுதலை...

உன் கஷ்டத்தை நினைத்து கண்ணீர் விடாதே...

கல்வாரியை நினைத்து கண்ணீர் விடு...

பிறகு பார் வியாதிகள் கஷ்டங்கள் கவலைகள் எல்லாம் காணாமல் போவதை நிச்சயம் நீ காண்பாய்...

ஆமென்... அல்லேலூயா....

*********************************
https://mobile.facebook.com/LIVINGWAYMARVEL/

http://marveljerome.blogspot.in

No comments:

Post a Comment