Friday 28 October 2016

நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

#ஜீவ வழியின் நற்செய்தி

இவ்விதமாக,நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

(கலாத்தியர் 3:24)

டேனியல்: “எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்;
நன்மை செய்கிறவன் இல்லை,ஒருவனாகிலும் இல்லை” (சங்கீதம் 14:3) என்று சொல்லுகிறது.

ஜான்: ஆமா தேவனுடைய பார்வையில் எல்லாரும் சமமாக இருக்கிறார்கள். அவருக்கு முன் சிறிய பாவி, பெரிய பாவி, மோசமான பாவி,கொடூரமான பாவி, நல்ல பாவி, கெட்ட பாவி என்று எந்த வித்தியாசமும் இல்லை.

டேனியல்: சரிதான், தேவனுடைய பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டா தான் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.......

ஜான்: ஆமா டேனி.... தேவனுடைய பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை நமக்கு காண்பித்து உணர்த்துவதற்காகத்தான்
#பழைய ஏற்பாட்டுக் காலத்தில் #நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.

டேனியல்: இதில் தான் பரிசேயர்கள் தவறு செய்து விட்டார்கள்.
அவர்கள், நாம்....... நியாயப்பிரமாணத்தின்படி செய்து காண்பிக்க வேண்டும், அப்போது தேவன் நம்மை நீதிமான் என்று சொல்லுவார்,அதற்காகத்தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது என்று எண்ணினார்கள்.இன்னும்
அந்த பரிசேய கூட்டம் இருக்கிறது

ஜான்: ஆமா அவர்தான் கிறித்தவ வேடமிட்ட பரிசேயர்கள்,ஆனால் நியாயப்பிரமாணத்தின்படி எவருமே செய்ய முடியாது என்பதுதான் உண்மை. தேவன், எல்லாரும் செய்ய முடியாமல் தோற்று,தவிக்கிறது போன்ற பிரமாணத்தைத்தான் கொடுத்தார்.

டேனியல்: எந்த ஒரு மனுஷனும்
இந்த பிரமாணத்தின்படி வாழ
முடியாது;அதை முற்றிலும் பூரணமாய் நிறைவேற்ற முடியாது.ஏனென்றால் அவன் ஒன்றில் தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான்....

ஜான்: தேவன் பிரமாணத்தைக் கொடுத்ததற்கான காரணம் என்னவென்றால்,மனுஷன் #பிரமாணத்தின்படி செய்து
பார்த்து,அதை தன்னால் செய்ய முடியவில்லையே என்கிற தவிப்பு அவனுக்குள் உண்டாக வேண்டும் என்றும், தன்னுடைய #பாவத்தையும், குறைவையும், இயலாமையையும், பாவம் தனக்கு என்ன செய்திருக்கிறது என்பதையும் அவன் பார்க்க வேண்டும் வேண்டும் என்றும், இதையெல்லாம் பார்த்து அதை உணர்வதற்காகத்தான் தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்.....

டேனியல்: மனுஷனிலிருக்கிற
பாவ சுபாவத்தையும்,அவனுடைய இயலாமையையும், அவனால் பாவத்தை ஜெயித்து வாழ முடியாது என்பதையும் காண்பிப்பதற்காகவும், அவன் பாவி என்பதை உணர்த்துவதற்காகவும்தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதே ஒழிய,அவனை #இரட்சிக்கிறதற்காக கொடுக்கப்படவில்லை.

ஜான்: நியாயப்பிரமாணம் மனுஷனை இரட்சிக்க முடியுமென்றால் எல்லாருமே அதன் மூலம் இரட்சிக்கப்படலாமே! இயேசு வரவேண்டியதில்லையே! இரட்சகர் ஒருவர் தேவையில்லையே! மனுஷன் நியாயப்பிரமாணத்திற்கு முன்பாக வந்து நிற்கும்போது அது அவன் யார் என்பதை அவனுக்குக் காட்டுகிறது. இந்த விதத்தில் நியாயப்பிரமாணம் ஒரு உபாத்தியாய் இருந்தது என்று வேதம் சொல்லுகிறது.

“இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய்இருந்தது”
(கலாத்தியர் 3:24).

டேனியல்: ஆமா ஜான்.... இயேசு சிலுவையில் மரித்து,
உயிரோடெழுந்த பிறகு,அவரை
விசுவாசித்து அதன்மூலமாக நாம் நீதிமானாக்கப்படுவதற்காக
நியாயப்பிரமாணம் நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தது.

ஜான்: சரியாக சொன்னாய்...... நியாயப்பிரமாணத்தை செய்கிறதின்
மூலமாக அல்ல,விசுவாசத்தின்
மூலமாகத்தான் நாம் நீதிமானாக்கப்படமுடியும். இயேசு தான் நமக்கு இரட்சகர்,
இயேசு நமக்கு அவசியம்,
அவரில்லாமல் நமக்கு இரட்சிப்பு இல்லை என்பதை காண்பித்து,
அவரிடத்திலே நம்மைகொண்டு
வருவதற்காகவும்,நாம் இரட்சகரை நாடுவதற்காகவும் தான் நியாயப்பிரமாணம்கொடுக்கப்பட்டது.

டேனியல்: நியாயப்பிரமாணம்
நம்மை நீதிமானாக்குவதில்லை.
அது நம்மைகிறிஸ்துவண்டை
கொண்டுவருகிறது.கிறிஸ்து நம்மை
நீதிமானாக்குகிறார்.அவர்பேரில்
வைக்கிறவிசுவாசத்தினால்
நாம் நீதிமானாகிறோம்.

ஜான்:ஆமா,நாம் எப்படி
நியாயப்பிரமாணத்தை
பார்க்கிறோம் என்பது மிகவும்
முக்கியம்.

டேனியல்: இன்று ஒரு சிலர்.....
"நான் பத்து கற்பனையின்படி
செய்துவிட்டால் நான் நீதிமான்"
என்று அப்படி தங்களைபார்க்கிறார்கள்.
ஆனால் பத்துகற்பனையின்படி
எவருமே முழு நிறைவாக செய்ய முடியாது.....

ஜான்: செய்ய முடியாத ஒன்றை
தேவன்எதற்காககொடுத்தார்? என்று அனேகர் கேட்கலாம்..... !
செய்ய முடியாத ஒன்றைக்கொடுத்தால்தான் நான் பாவி என்கிற உணர்வு நமக்குள் உண்டாகும். அந்த உணர்வு
உண்டானால் தான் எனக்கு ஒரு இரட்சகர்அவசியம் என்கிற
அவசியத்தையும் நாம்மால் உணர முடியும்......அதனால் தான்
தேவன் பழைய ஏற்பாட்டுக்காலம்
முழுவதும் போதிக்கிறார்.
கிறிஸ்துவண்டை நடத்துவதற்கு நியாயப்பிரமாணத்தைதருகிறார்.
கிறிஸ்து நம்மை இரட்சிப்புக்குள்
நடத்துகிறார்.நியாயப்பிரமாணம்
கிறிஸ்துவண்டைநடத்துகிற
உபாத்தியாய் இருந்தது.

டேனியல்: ஆமா ஜான்....... ‘உபாத்தி’ என்றால் ‘teacher’ என்று
அர்த்தம்.இதை KJVஎன்கிற ஆங்கில மொழிபெயர்ப்பு வேதாகமம்
‘school master’ என்று
மொழிபெயர்க்கிறது. NKJV
என்கிற ஆங்கில மொழிபெயர்ப்பு
வேதாகமம் ‘tutor’ என்று மொழிபெயர்க்கிறது.
நியாயப்பிரமாணம் நாம் பாவி என்பதை காண்பிப்பதின் மூலமாக
கிறிஸ்துவும் அவருடையசிலுவை
மரணமும் அவசியம் என்பதையும்,
அதன் மூலமாகத்தான்
நாம் இரட்சிக்கப்பட முடியும் என்பதையும் காண்பிக்கிறது.
இதற்காகத்தான் நியாயப்பிரமாணம்கொடுக்கப்பட்டது.....

விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
(ரோமர் 10:4)

கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

(ரோமர் 8:2)

ஏனெனில்,#நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்;
அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
(எபேசியர் 2:10)

ஆமென்.. அல்லேலூயா....

=======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

No comments:

Post a Comment