Saturday 22 October 2016

திரித்துவம்

#திரித்துவம்

முருகன்: ஜான் எப்படி இருக்கிறீங்க ?

ஜான்: நல்ல தேவ கிருபையால் நலமா இருக்கேன்...அப்பரம் உங்க கிறித்தவ வாழ்க்கை எப்படி போய்கிட்டு இருக்கு ?
தினமும் பைபிளில் படிக்கிறீங்களா ? ஜெபம் பண்றீங்களா ?

முருகன்: நல்லா போய்கிட்டு இருக்குங்க ஜான்,நீங்க போன வாரம் சொன்ன இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை நான் முழுசா நம்புரேன்... அவரே கடவுளிடம் நம்மை கொண்டு போய் சேர்க்கிற ஒரே வழி என்று விசுவாசிக்கிறேன்... அப்பரம் நீங்க வாங்கி கொடுத்த பைபிளையும்  கொஞ்சம் கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சுருக்கேன்....அடுத்த வாரம் உங்க சர்ச்சுல ஞானஸ்நானம் எடுக்கலாமுனு முடிவும் பண்ணிருக்கேன்....

ஜான்: ரொம்ப நல்லது,இன்னும்
நெறய காரியங்களை குறித்து உங்களுக்கு வேத வசனம் மூலம் விளக்குகிறேன்

முருகன்: ஓகே ஜான் அதுக்கு முன்னாடி எனது இந்த சந்தேகத்தை போக்குங்க,
நான் கடந்த வாரம்தான் இயேசு கிறித்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டேன்... எனக்கு அந்த அளவுக்கு பெரிதாக தேவனை பற்றி தெரியாது... ஏதோ நீங்கள் போதித்ததை வச்சு கொஞ்சம் கொஞ்சம் அறிந்திருக்கேன்... திரித்துவம்
என்றால் என்ன? தேவன் ஒருவரா ?
மூவரா ? இதுபற்றி விளக்கம் கொடுங்க
ஜான்...

ஜான்: அருமையான கேள்வி முருகா!
இந்த கேள்விக்கான சரியான விடையை வேத அடிப்படையில்,
அறிந்துகொள்ளாமல் சத்தியத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அனேக கிறிஸ்தவர்களே சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு கள்ள உபதேச கூட்டத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்,
ஆகவே தேவனை அறிகிற அறிவை நோக்கிய ஆரம்ப நிலையில் இருக்கிற நீங்கள் இந்த கேள்விக்கான பதிலை கட்டாயம் அறிந்தவராக இருக்க வேண்டும்...இந்த கேள்விக்கான பதிலை நான் வேதாகம அடிப்படையில் தருகிறேன்..

முருகன்: சரிங்க ஜான் சொல்லுங்க

ஜான்: முருகா,திரித்துவத்தை குறித்து
வேதாகமம்  தெளிவாக போதிக்கிறது, நமக்கு மூன்று தேவன் அல்ல.
ஒரே தேவன் ஆனால் அவர்
மூன்று ஆள்தத்துவங்களில் வெளிப்படுகிறார் ஆனால்
தேவன் ஒருவரே.....

முருகன்: அது எப்படிங்க ஜான் ?

ஜான்: பின்வரும் வசனங்களை  கவனிங்க முருகா...

இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
(உபாகமம் 6:4)

ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

(1 கொரிந்தியர் 8:4)

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய்,அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும்
விசுவாசித்து, நடுங்குகின்றன. (யாக்கோபு 2:19)

முருகன்: அப்படியென்றால் தேவன் ஒருவர்தானே ?

ஜான்: ஆமா தேவன் ஒருவர்தான் ஆனால் அவர் ஒருமைத்தன்மை கொண்டவர் அல்ல...

முருகன்: என்னாது தேவன் ஒருவர் தான் ஆனா அவர்  ஒருமைத்தன்மை கொண்டவர் கிடையாதா ? எப்படி ?

ஜான்: எபிரேய மொழியில் கடவுள் என்ற வார்த்தைக்கு Elohim,
என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது இது ஒரு பன்மை தன்மை சொல் ஆனால் ஒருமையில் "தேவன்"  அழைக்கப்படுகிறது.

முருகன்: அப்படியா !!

ஜான்: ஆமா முருகா ! வேதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது...

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே,#இம்மூவரும் #ஒன்றாயிருக்கிறார்கள்.
(1 யோவான் 5:7)

முருகன்: இதை எப்படி நான் விளங்கி கொள்வது ஜான் ?

ஜான்: புரிகிற மாதி சொல்றேன்
முருகா.......
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக.உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
(1 தெசலோனிக்கேயர் 5:23)

மனிதன் என்கிற பதம்
ஒருமைத்தன்மை கொண்டது,
மனிதன் என்பவனும் ஒருவனே,
ஆனால் மனிதன் என்கிற
பதத்திற்குள்,ஆவி, ஆத்மா,சரிரம்
என்று மூன்று பகுதிகள் சேர்ந்திருக்கிறது.

ஆகவே மனிதன் என்றால்
மூன்றுப்பகுதிகள் ஒருங்கி இணைந்திருப்பது என்பது
நமக்கு தெரிகிறது இவைகளை
யாரும் பிரித்துப் பார்க்க முடியாது.
மனிதானால் தனித்தனியாக
செயல்பட முடியாது,
ஆனால் தேவனால் தனித்தனியாக,
ஏக சிந்தனையுடன் செயல்பட முடியும்..ஏனென்றால் அவர் தேவன் அவர்தான் சிருஷ்டி கர்த்தர்...
அவராலே எல்லாம் உண்டாக்கப்பட்டது.....

அவர் பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன்,பரிசுத்த ஆவியாகிய தேவன் என்று மூன்று பேரும் சேர்ந்து,ஒரே தேவனாக இருக்கிறார்.

✞ பிதாவாகிய தேவன்
1 பேதுரு1:2 2,பேதுரு1:17

✞ குமாரனாகிய தேவன்
எபி 1:8, தீத்து 2:13, ரோ 9:5

✞ பரிசுத்த ஆவியாகிய தேவன்
அப் 5:3-4, 1கொரி 6:19, 2கொரி 6:16

உதாரணமாக இயேசு தம் சீஷர்களுக்கு கொடுத்த கட்டளையின்படி.....
சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,என்ற வசனத்தின் படி ஒரே நாமத்தில்
மூன்று ஆள்தத்துவத்தை பார்க்க முடியும். என்ன முருகா திருத்துவம் பற்றி நான் சொல்றது புரிகிறதா ?

முருகன்: புரிகிறது ஜான் மேலும் சொல்லுங்க.....

ஜான்: படைப்பிலேயே திருத்துவம் இருக்கிறது ஜான்,

ஆதி 1:1 ஆதியில் தேவன் உலகத்தை
சிருஷ்டித்தார்.(பிதாவாகிய தேவன்)

ஆதி 1: 2 தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். (பரிசுத்த ஆவியாகிய தேவன்)

ஆதி 1:3 வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். (வார்த்தை - குமாரனாகிய தேவன்)

முருகன்: வார்த்தையா ! அதை எப்படி குமாரனாகிய தேவன் என்று எப்படிச் செல்ல முடியும் அதற்கு வசனம் இருக்கா தெரியாமதான் கேட்கிறேன் ஜான் ?

ஜான்: யோவான் 1:1 முதல் 1:14 வரை வாசித்துப்பார்த்தால் புரியும் முருகா, மனிதனை தேவன் உருவாக்கும்
போதும் அவரின் திருத்துவ தன்மை வெளிப்பட்டது...

பின்பு தேவன்: நமது சாயலாகவும்
நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; (ஆதியாகமம்1:26)

நமது சாயல் என்றுச் சொல்லும்போது பன்மையைக் குறிக்கிறது.ஆகவே மனிதனைப் படைக்கும் போதும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் செயல் படுவதைப் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது....

முருகன்: ஓ.... !! அப்படியா!

ஜான்: அதுமட்டுமல்ல நமக்கு  இரட்சிப்பை ஏற்படுத்துவதிலும்  தேவனின் திருத்துவ தன்மைகள் வெளிப்படுகிறது....

பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே,
ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே,
கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப் படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது:கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
(1பேதுரு1:21)

1)பிதாவாகிய தேவன் நம்மைத் தெரிந்து கொள்கிறார்.

2)ஆவியான தேவனால் பரிசுத்தமாக்கப்படுகிறது.

3)குமாரனாகிய தேவனின் இரத்தம் தெளிக்கப்படுகிறது.(நம்முடைய பாவங்களைக் கழுவுவதற்க்கு)

இப்பொழுது உங்களுக்கு திரித்துவத்தை பற்றி புரிந்திருக்கும்,என்று நான்
நம்புகிறேன்... என்ன முருகா ?

முருகன்: ஆமா ஜான்,
எனக்கு நன்றாக புரிந்துவிட்டது,
நமக்கு மூன்று தேவன் அல்ல.
ஒரே தேவன் தான் ஆனால்
அவர் மூன்று (பிதா,குமாரன்,
பரிசுத்த ஆவி) ஆள்தத்துவங்களில்
வெளிப்படுகிறார் ஆனால்
தேவன் ஒருவரே.....

ஆமென்... அல்லேலூயா...

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;.
(1 யோவான் 5:7)

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

2 comments:

  1. RC Bible...

    யோவான் எழுதிய முதல் திருமுகம் 5:7-8 (ERV-TA) எனவே இயேசுவைக் குறித்து நமக்குக் கூறும் மூன்று சாட்சிகள் இருக்கின்றன.
    ஆவி, நீர், இரத்தம் இந்த மூன்று சாட்சிகளும் ஒப்புக் கொள்கின்றன.

    http://www.bibleforandroid.com/v/41be18490909

    1 John 5:7-8 (TBSI) "(பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;"
    "பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது."

    http://www.bibleforandroid.com/v/48a1eb2091c1


    என் இந்த முறன்பாடு.... இந்த வசனத்தில்...
    என் அடைப்பு குறீயிடு பயன்படுத்தி உள்ளார்
    அது யாரால்.. எந்த காலகட்டத்தில் இடப்பட்டது? எதற்காக இடப்பட்டது...?
    கொஞ்சம் விளக்கம் தாருங்கள் சகோ

    ReplyDelete
  2. RC Bible...

    யோவான் எழுதிய முதல் திருமுகம் 5:7-8 (ERV-TA) எனவே இயேசுவைக் குறித்து நமக்குக் கூறும் மூன்று சாட்சிகள் இருக்கின்றன.
    ஆவி, நீர், இரத்தம் இந்த மூன்று சாட்சிகளும் ஒப்புக் கொள்கின்றன.

    http://www.bibleforandroid.com/v/41be18490909

    1 John 5:7-8 (TBSI) "(பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;"
    "பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது."

    http://www.bibleforandroid.com/v/48a1eb2091c1


    என் இந்த முறன்பாடு.... இந்த வசனத்தில்...
    என் அடைப்பு குறீயிடு பயன்படுத்தி உள்ளார்
    அது யாரால்.. எந்த காலகட்டத்தில் இடப்பட்டது? எதற்காக இடப்பட்டது...?
    கொஞ்சம் விளக்கம் தாருங்கள் சகோ

    ReplyDelete