இயேசு அவளை நோக்கி:
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 11:25-26)
டேனியல்: நண்பா இந்த உலகத்தின்
பணம்,பதவி,அதிகாரம் எப்பொழுதும் மனிதனுக்கு உதவாது என்பதை நாம் ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும் இந்த உலகத்தில் நாம் பார்க்கும் எல்லா அதிகாரங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் இல்லாமல் போகலாம்,
ஒரு ஆதிகாரம் நிறைந்த நபர் தன்னுடைய அதிகாரத்தால் அடைய முடியாத அனேக விலையேற பெற்ற காரியங்கள் மனித வாழ்வில் உண்டு.
பால்ராஜ்: ஆமா,குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். (1 யோவான் 5:12)
என்று வேதம் நமக்கு போதிக்கிறது
டேனியல்: (யோவான்:8:51)..ல்
இயேசு கிறிஸ்து இவ்வாறு சொல்கிறார்...........
"ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால்,அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று கூறியுள்ளார்.
பால்ராஜ்:ஆம்... அதுமட்டுமல்ல.....
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;#உயிரோடிருந்து
என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" (யோவான்:11:26).. என்கிறார்....
டேனியல்: ஆமா நண்பா!
நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு தேவனோடு
கூட கொண்ட ஐக்கியத்தில்
வாழும் போது........
நித்திய ஜீவன் பூமியில்
ஆரம்பிக்கிறது.
அதாவது நம்முடைய ஆவி உயிர் பெறுகிறது.அதனால் தான்
நாம் #ஆவிக்குரிய மரணத்தை காணப்போவது இல்லை #சரீர மரணத்தை மட்டுமே காணப்போகிறோம்....
பால்ராஜ்: ஆமா, நம்முடைய ஆவி நித்திய நித்தியமாய் தேவனோடு உறவாடுவதாய் உயிரோடிருக்கும்..
ஆமென்.......
நாம் எப்படிப்பட்ட உன்னதமான சிலாக்கியத்தை தேவன் தம்முடைய குமாரன் இயேசு மூலமாய் நமக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிறார் பாரு நண்பா! ஆச்சரியமாக இருக்கு !
டேனியல்: உலகத்தை
ஆண்டவர்கள்,அதிகாரம் கொண்டவர்கள்,மாபெரும்
தலைவர்கள் என கோடிக்கணக்கான
நபர்களை இந்த பூமி கண்டிருக்கிறது
அவர்கள் பிறந்து,வளர்ந்து,ஆண்டு
பின் மறித்து போயிருக்கிறார்கள்,
அவர்களில் எத்தனை பேர் இயேசுவை பற்றும் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தவர்கள் என்பது எனக்கு தெரியாது... ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெரியும் இயேசுவின் வருகையின் போது நாம் மறுரூபமாக்கப்படுவோம்,
மகிமையான சரீரத்தை அடைவோம்..
ஏனெனில் நாம் இயேசுவை பற்றும் விசுவாச வாழ்க்கை வாழ்கிறோம்...
அவர் நம்மை உயிர்ப்பிக்க வல்லவராய் இருக்கிறார்...
பால்ராஜ்: ஆமா நண்பா அருமையாக சொன்னாய்..... மனுஷன்,உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தி கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமென்ன? அவனுக்கு ஒரு
லாபமும் கிடையாது....
ஆனால் இயேசுவை ஆதாயாமாக கொண்டு அவரை நம்பி வாழும்
நமக்கு நிச்சயமாக லாபம்
உண்டு,நிலையான சமாதானம்
உண்டு,நித்திய ஜீவன் உண்டு,
ஆமென்... அல்லேலூயா...
*********************************
(Living Way Evangelic Mission)
Bro:Marvel Jerome
marveljerome.blogspot.in
No comments:
Post a Comment