Sunday 13 November 2016

அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமாக்கும், அழியும் வாழ்வை அழியாமையாக்கும், கடவுள் வழங்கும் இலவச இரட்சிப்பு

அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமாக்கும்,
அழியும் வாழ்வை அழியாமையாக்கும்,
கடவுள் வழங்கும் இலவச இரட்சிப்பு
*************************************
நேற்று மதியம் Bank-ல் வரிசையில் நிற்கும் போது எங்களுக்கு முன்னாடி முதியவர்கள் சிலர் நின்றுகொண்டு இருந்தார்கள்... அவர்களில் ஒருவர்  இவ்வாறாக சொன்னார்...
"வாழத்தெரியாதவன் வாழும்
நாட்டில் ஆளத்தெரியாதவன் ஆட்சி செய்கிறான்" எல்லோரும் அவரை கவனித்தார்கள்,நாங்கள் அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம்..
எங்களோடு நன்றாக  பேசினார்...
அவருக்கு எப்படியாது இந்த இடத்தில் சுவிசேஷத்தை சொல்ல வேண்டுமே என்ற எண்ணம் எனக்குள் ஓடியது,
அதற்கான சந்தர்ப்பத்தை கர்த்தர் அமைத்து தந்தார்...அவர் பெயர்
பழனி... அவர் திடீரென எங்களிடம்
இவ்வாறாக பேச ஆரம்பித்தார்..
அது எனக்கு சத்தியத்தை போதிக்க வசதியாக அமைந்தது...


பழனி: “நாம் ஏன் இந்த பூமியில  இருக்கிறோம்”? எதுக்காக இப்படி பேங்க்குள கால் கடுக்க கலையில இருந்து நிக்கிறோம்? இந்தப் பூமியில்
நாம் மிக குறுகிய காலமே வாழப் போகிறோம்.என்றாவது ஒரு நாள்
நம் வாழ்வு முடியப் போகிறது அப்ப
நாம் எதற்காக வாழ்கிறோம்?
அர்த்த மற்ற வாழ்வு.. அர்த்த மற்ற
சாவு இதுதான் நமது வாழ்க்கையா ?

டேனியல்: ஏன் அண்ணே இவளவு சலிப்பு உங்க வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ளவும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவும் வேண்டுமா அப்படினா நான் சொல்றத கொஞ்சம் கவனிங்க அதுக்கான
வழிய சொல்றேன்...
கவனிக்கிறீங்களா ?

பழனி: சொல்லுங்க தம்பி,எப்படியும்
நம்ம பேங்க்குள இருந்து வீட்டுக்குபோக சாயங்காலம் ஆகிடும்.. ஏதாவது பேசிக்கிட்டே இருந்தா பொழுது
போவது தெரியாது.. அதனால சொல்லுங்க..

டேனியல்: ஓ.கே ஐயா,சொல்றேன்,
ஆனா உங்க பொழுதுபோக்காக அல்ல,
உங்க நிலையில்லா வாழ்க்கையை,
நிலையான வாழ்க்கையாய்  மாற்றுவதுக்காய்....

பழனி: (ஆர்வத்துடன்) சரி சரி சொல்லுங்க தம்பி...

டேனியல்: ஆரம்பத்துல கடவுள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.கடவுள் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார்,அது மிகவும்
நன்றாயிருந்தது.என்று கண்டார்...
கடவுள்  இவ்வுலகில் உள்ள அனைத்தையும் உண்டாக்கினார். அவருடைய படைப்பில் மிக சிறந்த படைப்பு மனிதனே, ஏனென்றால் கடவுள் மனிதனை தம்முடைய சாயலில் படைத்தார்,அவர் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார்

கடவுள் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனிதன் ஜீவாத்துமாவானான்.கடவுள் மனிதனை நேசித்தார். கடவுள் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்தார். கடவுள் மனிதனுக்கு சுயமாக முடிவெடுக்கும் திறனை தந்தருளினார்,ஆனால் மனிதன் அதை தவறாக பயன்படுத்தி கடவுளுக்கு கீழ்ப்படியாமற் போனான்.
பாவம் நம்மை கடவுளிடத்திலிருந்துப் பிரித்தது.....

மனிதனின் கீழ்ப்படியாமை நிமித்தம் பாவம் இவ்வுலகில் தோன்றியது. மனிதனின் இருதயத்தின் யோசனைகள் எல்லாம் பொல்லாப்பு நிறைந்ததாய் இருந்தது.ஆகவே பாவம் மனிதனை கடவுளிடம் இருந்து பிரித்தது. பாவம் என்பது கடவுளால்  விலக்கப்பட்ட செயல் அல்லது சிந்தனை ஆகும். நாம் அனைவரும் வழி விலகி நம்மை நேசிக்கும் உண்மையான கடவுளை விட்டு பின்னோக்கி சென்றோம்.

பாவத்தை விட்டு முற்றிலும் விலகி நன்மை செய்யும் நீதிமான் ஒருவராகிலும் இவ்வுலகில் இல்லை. பூமியிலே பாவம் பெருக மனிதன் தேவனை மறந்து போனான், மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள இடைவெளியும் அதிகமாகி கொண்டே இருந்தது. பாவத்தின் சம்பளம் மரணம். நாம் எல்லோரும் பாவம் செய்து நரகத்தில் நித்திய மரண தண்டனை பெறுவதற்கு ஏதுவானோம்.

பாவம் நிறைந்த மனித இனத்தின் மீட்பிற்காக பாவ நிவாரண பலி தேவைப்பட்டது, ஆதலால் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாகப் பிறந்தார். இப்படியாக கடவுள் தம்முடைய ஒரே குமாரனை
தந்தருளி தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். அவரை நம்புகின்ற அனைவருக்கும் நித்திய வாழ்வு உண்டு. பாவத்தின் நிமித்தம் கடவுளுக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட இடைவெளியை நீக்க இயேசு கிறிஸ்து மத்தியஸ்தராக தோன்றினார்.கடவுள் ஒருவரே, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தர்  ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசு அவரே. அவர் நமது பாவங்களுக்காக பாவ நிவாரண பலியாக சிலுவையில் பலியாகி மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து,
விண்ணேற்றம் அடைந்து,நமது பரம தகப்பனாகிய கடவுளிடம் நமக்காக பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார்
 இவ்வாறு கடவுள் உலகத்தார் மீது தான் கொண்ட தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார்.

பழனி: தம்பி... நீங்க கிறிஸ்டீனா !
நான் கிறித்தவ பள்ளிகூடத்துல தான் படிச்சேன்.. எனக்கு நெறய கிறித்தவ பாட்டுகள் தெரியும்.. ஆனா நீங்க இப்ப சொன்ன விஷயங்கள் எனக்கு புதுசு,
இதுக்கு முன்னாடி யாரும் எனக்கு இத
சொன்னது இல்லை,எனக்கு ஜீசஸ்-னா பிடிக்கும்...

டேனியல்: ரொம்ப நல்லதுங்க ஐயா,
இயேசுவை உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் போதாது அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர் கட்டளை இட்டபடி நாம் நடக்க வேண்டும்...
அதுதான் கடவுளின் விருப்பம்
நாம் அனைவரும் நித்திய மரண தண்டனையில் இருந்து தப்புவதே கடவுளின் விருப்பமாகும். இயேசுவின் மரணத்தின் மூலமாய் நாம் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து இருந்து விடுதலை பெற்று அவருடைய உயிர்த்தெழுதலின் மூலமாய் நாம் புது வாழ்வு பெற்று இருக்கிறோம்.
இயேசு கிறிஸ்து மட்டுமே நித்திய மரணத்திலிருந்து மனிதனை விடுவிக்க கடவுள் கொடுத்த ஒரே வழியாகும். அவரே பரலோகத்திற்கு (மோட்சம்) செல்ல ஒரே வழி ஆவார். அவர் மூலமாய் அல்லாமல் யாரும் கடவுளிடம் சேர முடியாது.

பழனி: இயேசுவை ஏற்றுக்கொள்ள அவரை என் உள்ளத்தில் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்யனும் ஏதாவது பாதையாத்திரை? போகனுமா ? இல்ல பட்டினி கிடக்கனுமா வெள்ள ஜிப்பா போடனுமா ? செருப்பு போடாம நடக்கனுமா ? இல்ல இந்த போங்க்குக்கு முன்னாடி நிற்கிறமாதி ஏதாவது சர்ச்சுக்கு முன்னாடி போய் நிக்கனுமா ?
 எதாவது கிறித்தவ நிறுவனத்திற்கோ ஸ்தாபனத்துக்கோ நன்கொடை  கொடுக்கனுமா ?

டேனியல்: இயேசுவை உங்கள் வாழ்வில் பெற்று கொள்ள நீங்கள் எதையும் செய்ய வேண்டியது இல்லை.
இயேசுவை சொந்த இரட்ச்சகராக ஏற்றுக் கொள்ள, உங்கள் பாவ நிலையை உணர்ந்து, மனம் திரும்பி இயேசுவை விசுவாசித்தால் போதும். இயேசுவை நீங்கள் உங்கள் வாயினாலே அறிக்கையிட்டு,
தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உங்கள் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவீர்கள்.

************************************
இந்த உரையாடலை படித்துகொண்டிருக்கும் என் அன்பு சகோதரா,என் அன்பு சகோதரி
இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா ? இன்றே உங்கள் உள்ளத்தில் அவரை ஏற்றுக்கொளுங்கள், அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமாக்கி கொள்ளுங்கள்
அழிவுள்ள வாழ்வை அழியாமையாக்கி கொள்ளுங்கள்..

எல்லாம் இலவசம்

=======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

No comments:

Post a Comment