Friday 3 August 2018

உங்கள் ஜெபத்திற்கு நிச்சயம் பதில் உண்டு

பீட்டர்: நாம் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளை கேட்கிறோமோ அவைகளை பெற்றுக்கொள்வோம்..
(மத்தேயு 21:22)

ஜான்: ஆமா நாம் ஜெபிக்கும் போது,
எவைகளை தேவனிடத்தில் கேட்கிறோமோ
அவைகளை நாம் பெற்றுகொள்வோம் என்று விசுவாசிக்கும் போது அவைகள் நமக்கு உண்டாகுகிறது....(மாற்கு 11:24)

பீட்டர்: கிறிஸ்துவுக்கும் நம்முடைய
அநியாயங்களைக் கிருபையாய்
மன்னித்து, நம்முடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் தேவன்  நினையாமலிருக்கிறார்(எபி8:12)
எனவே அவருடைய செவி நமது வார்த்தைகளை கவனிக்கும்
(ஏசாயா 59:1-2)நம்முடைய
ஜெபங்களுக்கு தேவன் நிச்சயமாக
பதில் தருவார்...

ஜான்: ஆமா... நண்பா.. நமது பெலவீன நேரத்தில் நாம் எப்படி ஏற்றபடி வேண்டுதல் செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது ஆவியானவர் நமது வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
(ரோமர் 8:26)அதனால் நமக்கு எல்லா நேரங்களிலும் தேவனிடத்திலிருந்து,
பதில் உண்டு....

பீட்டர்: ஆமா அதோடு கூட நமது..ஆசைகள் தேவ சித்தத்தின்
படி இருந்தால்,நாம் எதை கேட்டாலும்
அவர் நமக்கு நிச்சயமாக கொடுப்பார்..
(1 யோவான் 5:14-15)எனவே நாம்
தேவ சித்தத்தை வேதத்தின்படி அறிந்துகொண்டு அதன் படி நமது ஆசைகளை,அமைத்து கொள்வோம்..

ஜான்: நாம் தேவனை நோக்கி மன்னிப்புக்காக ஜெபம்பண்ணும் போது,ஒருவன்பேரில் நமக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால்,அவைகளை
நாம் அவர்களுக்கு மன்னிக்க வேண்டும்,
அப்பொழுது நமது ஜெபத்திற்கு நிச்சய பதில் உண்டு..(மாற்கு 11:25)

பீட்டர்: ஆமா நண்பா! எனவே.... நாம்,ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து  விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படி,(பிலிப்பியர் 4:6)
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்போம்,அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை நமக்கு  அருள்செய்வார்.(சங்கீதம் 37:4)....

ஜான்: ஆமா... நாம் ஒன்றுக்கும் கவலைப்படாமல்,கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய்இருந்து...நமது விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினால் செய்யும் போது தேவன் அதற்கு பதில் கொடுப்பார்,

பீட்டர்: அதோடு கூட நம் தேவன்,
பலியின் அடிப்படையில் ஜெபத்திற்கு
பதில் கொடுப்பவர்...(1 சாமு7:9)
பலியிருந்தால் பதில் உண்டு...

ஜான்: ஆமா... இயேசுகிறிஸ்து நமக்காக
பலியானார்,தன்னையே நமக்காக  கிருபாதாரபலியாக ஒப்புக்கொடுத்தார்
(எபி 10:10,12)(1 யோவ2:2)(ரோம3:26)
அவர் நமக்காக பலியானதால்,தேவன் அந்த பலியின் அடிப்படையில் நம்முடைய பாவங்களை பாராமல்,நிச்சயம் பதில் தருவார்.

ஆமென்.. அல்லேலூயா...

Bro:Marvel Jerome
Madurai

No comments:

Post a Comment