Wednesday 22 August 2018

அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்
(நீதிமொழிகள் 23:7)

பரத்: எல்லா செயல்களுக்கும் ஆரம்பம், அவர்களுடைய இருதயத்தின் சிந்தனையிலேயே இருக்கிறது.
ஜீவனோ,மரணமோ,பரிசுத்தமோ,
இச்சையே,இவையெல்லாம் மனிதனின் இருதயத்தின் சிந்தனையிலிருந்து தான் ஆரம்பமாகிறது.

பிரவீன்: ஆமா,அந்த சிந்தனையே, நம்முடைய வாழ்க்கையின் தோற்றத்தை வெளிப்படுத்தும்."வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்"
(ரோம. 11:16).ஆகவே, நாம்,நம் சிந்தனைகளில் மிகவும் கவனமாக
இருக்க வேண்டும்.

பரத்: சரியாக சொன்ன பிரவீன், அப்போஸ்தலானாகிய பவுல், நம்முடைய சிந்தனை வாழ்வு எப்படி பட்டதாக இருக்க வேண்டும் என்று பிலி 4: 8 ல் இவ்வாறு
 ஆலோசனை கூறுகிறார்...........

"கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ,
புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்".
(பிலி 4: 8)

பிரவீன்: ஏன் வேதம்
அவைகளையே சிந்தித்துகொண்டிருங்கள் என்று சிந்தனை வாழ்வுயை
முக்கியப்படுத்தி போதிக்கிறது
என்றால் நாம்,நம் சிந்தனை வாழ்வில் ஜெயம் பெற்றவர்களாக இருந்தால்
தான் மற்ற எல்லா பகுதிகளிலும் ஜெயமுள்ளவர்களாக இருப்போம்
எனவே நாம் தவிர்க்க வேண்டிய சில
தீய சிந்தனைகளை குறித்தும்,வாழ்வில் இருக்கவேண்டிய சில நல்ல சிந்தனைகளைக் குறித்தும் வேதம் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி நாம் நம்முடைய  வாழ்க்கையை வளப்படுத்துவோம்.


No comments:

Post a Comment