Sunday 6 December 2015

நம் தேவன் நிறைவின் தேவன்

#Regular


நம் தேவன் நிறைவின் தேவன்


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராயிருக்கிறார் (எபேசியர் 3: 20)


பரத்: நம் தேவன், நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாய் கிரியைச் செய்கிற,தருகின்ற தேவன்.

பிரவீன்: ஆம் அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். அவர் வல்லமை மகத்துவமானது.
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் கிரியைசெய்கிறவர் அவர்.

பரத்: ஆமா நண்பா அண்ணாளின் வேண்டுதலையும்,தேவன் அவள்  வேண்டிக்கொண்டதற்கு அதிகமாக கொடுத்ததையும் எண்ணிப்பார்க்கும் போது ஆச்சரியமா இருக்கு. நம் தேவன் நிறைவாக கொடுக்கும் தேவன்.

 பிரவீன்: ஆம் அவர் நிறைவின் தேவன்,
அண்ணாள் குழந்தையவற்றவளாய், ஒரே ஒரு மகனைத் தான் கேட்டாள்.  கர்த்தர் தன் வார்த்தையை அனுப்பினார், அவள் தேவனுடைய வார்த்தை முழுமையாக நம்பினாள், அதுக்கப்பறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
அவள் கேட்டது ஒரு குழந்தை ஆனால்  சர்வவல்ல தேவன் ஆறு பிள்ளைகளை சேர்த்துக் கொடுத்தார்.

பரத்: ஆமா பிரவீன் அவள்,தான் ஒரு பிள்ளையை பெற்றெடுப்போம் என்று கூட நினைத்திருப்பாள்.ஆனால் தேவன்,அவள் கேட்டதற்கும் அதிகமாகவே கொடுத்தார்.

பிரவீன் :அதுமட்டுமல்ல சாலமோனைப் பாரு ! அவர் ஞானம் மட்டுமே கேட்டார். ஆனால் தேவன் அவர் கேட்டதற்கும், எதிர்பார்த்ததற்கும் மேலாக அவருக்கு செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தார்.

பரத்:அவர்களின் வேண்டுதல்களில்,
#சுய நலம் இல்லை.

பிரவீன்: நீ என்ன சொல்ற ?

பரத்:அண்ணாள் #கர்த்தருடைய காரியங்களுக்கு,ஒரு மகனையும், சாலமோன்,#மக்களின் நலனுக்காக ஞானத்தையும் கேட்டான்,ஆனால் தேவன் அவர்கள் கேட்டதற்கும் அதிகமாக நிறைவாய் கொடுத்தார்.

பிரவீன் :ஆமா பரத்,இன்று கூட நாம் நமது தேவையை தேவன் சந்திக்கும்படி அவரை கேட்டுக் கொண்டிருக்கிறோம், ஆனால் நம் தேவன், நாம் வேண்டிக் கொள்வதற்கும், நினைப்பதற்கும் அதிகமாய், நம் தேவைகளுக்கு மிகுதியாகவே அதை சந்திக்க வல்லவராய்  இருக்கிறார்.

பிரவீன்: நிச்சயமாக பரத் நாம் அவரது வார்த்தையை நம்பி, அதைப் பிடித்துக் கொள்வோம்,சுய நல வேண்டுதல்களை குறைத்துக்கொள்வோம்,
நம் தேவன்,நமது குறுகிய எண்ணத்திற்கும் தேவைக்கும் அதிகமாய் செய்ய வல்லவர் என்பதை நம்மூலமாய் கண்டிப்பாக நிரூபித்து காட்டுவார்,

பரத்: சரி வா ! நாம் சேர்ந்து அவரது நாமத்தை மகிமைப்படுத்துவோம்

பிரவீன்:ஆமென் அல்லேலூயா




ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

No comments:

Post a Comment