Thursday 29 July 2021

நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்,
ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
(யோவான் 15:15)

பிரியமானவர்களே! இந்த உலகத்திலேயே உங்களை நேசிக்கின்ற சகோதர சகோதரிகளும் அவர்களை விட உங்களை சிநேகிக்கின்ற  சிநேகிதர்களும் அநேகர் உங்களுக்கு இருக்கலாம் (நீதி 18:24)
ஆனால் அவர் எல்லோரையும் விடவும் உங்களை அதிகமாக நேசிக்கின்ற ஒரு சினேகிதர் ஒருவர் உங்களுக்கு உண்டு
அவர்தான் நம்முடைய கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து அவர் நமக்கு ஆண்டவரும் இரட்சகர் மட்டுமல்ல,
அவர் நமது சிநேகிதரும் உற்ற
நண்பனாய் இருக்கின்றார்,ஒருவன்
தன் சிநேகிதருக்காகத்  தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான
அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்று
சொன்ன இயேசு (யோவா 15:13)
அவருடைய சிநேகிதர்களாகிய,
நமக்காக தன்னுடைய ஜீவனையே கொடுத்தார், இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால்,நாம் தேவனுக்கு
நண்பர்களாய் இருக்கும் போது
அல்ல,நாம் தேவனுக்கு சத்துருக்களாக இருக்கையில் (ரோம :5:10)
இயேசு நம்மை சிநேகித்தார்,
நமக்காக தன்னுடைய
ஜீவனையே கொடுத்தார்.

சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்.(நீதிமொழிகள் 17:17)

இவ்வுலக உறவுகளும் நட்புகளும் பெரும்பாலும் நாம் வாழ்ந்து இருக்கும்பொழுது நம்மை நேசிப்பார்கள் நாம் தாழ்ந்து இருக்கும் பொழுது நம்மை வெறுப்பார்கள்,நல்ல பொருளாதார நிலைமையில்,நற்பெயரோடு நாம் இருக்கும் போது நம்மை அனேகர் சிநேகிப்பார்கள்,நம்முடைய வாழ்வில் கஷ்டமும் நஷ்டமும் நற்பெயருக்கு களங்கமும் ஏற்படும் நேரங்களில்,
நம்மை அவர்கள் சிநேகிக்க
மாட்டார்கள், நாம் ஏதாவது தவறு
செய்து விழுந்துவிட்டால்,நம்மை தூக்கவோ தாங்கவோ,அவர்கள்
முன்வர மாட்டார்கள்,தங்கள்
கௌரவம் போய்விடும் என்று
நம்மை விட்டு விலகி விடுவார்கள்,ஆனால்
நம்முடைய ஆத்ம நேசர்,நாம்
உளையான சேற்றில் விழுந்து
கிடந்தாலும் அவர் நம்மை தூக்குகிறவராகவும்,தனது கரத்தினால் நம்மை தாங்குகிறவராகவும் கன்மலையின்மேல் நம்மை நிறுத்தி உயர்த்துகின்றவராயும் இருக்கின்றார்
(சங்கீதம் 40:2)(சங்கீதம் 37:24)

இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களிலே
தன்னை மறுதலிக்க போகிறவர்களையும், ஆபத்திலே தன்னை விட்டு விட்டு
ஓடிப்போக போகிறவர்களையும், கடைசிவரை நேசித்தார் அவரின்
அன்பும் சிநேகமும் மாறவே இல்லை
(யோவான் 13:1) சொல்கிறது...
"தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே,முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்

ஆம் எனக்கு அன்பார்ந்தவர்களே!
நாம் வாழ்ந்து இருக்கும்போதும்,
அவர் நம்மை சிநேகிப்பார், நாம்
தாழ்ந்து இருக்கும் போதும்,அவர்
நம்மை சிநேகிப்பார்,நாம் விழும்
போதும் இயேசு நம்மை சிநேகிப்பார்,
நாம் திரும்பி எழும்போதும் இயேசு
நம்மை சிநேகிப்பார்,அவர் ஒருவரே
நம்மை எல்லாக் காலத்திலும்
சிநேகிக்கின்ற சிநேகிதர்.

நீதிமொழிகள் 19:4 சொல்கிறது.
"செல்வம் அநேக சிநேகிதரைச்
சேர்க்கும்;தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்"

நம்மிடத்தில் பணம் இருக்கும் பொழுது பாசத்தோடு பழக பல நண்பர்கள் வருவார்கள், நம்மிடத்தில் ஆஸ்தியும் அந்தஸ்தும் இருக்கும்பொழுது அன்போடு
ஐக்கியம் கொள்ள அனேக சிநேகிதர்கள் வருவார்கள், ஆஸ்தியும் அந்தஸ்தும் பணமும்,பலமும் நம்மை விட்டுச் சென்று விட்டது என்றால் நெருங்கிய நண்பர்கள் கூட நம்மை நெருங்க மாட்டார்கள்,
நம்மிடத்தில் பணம் இருக்கும் பொழுது நம்மை புகழ்வார்கள்,நம்மிடத்தில் பணம் இல்லை என்றால் நம்மை இகழ்வார்கள்.
இது உலக வழக்கம்,ஆனால் நம்முடைய ஆத்ம நேசராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பணத்தை பார்த்தோ,
நல்ல குணத்தை பார்த்தோ,
நம்மை அவர் சிநேகிக்கவில்லை,
நம்மிடத்தில் நல்லதென்று சொல்ல ஒன்றுமில்லை,அவர் நல்லவராக,
கிருபை உள்ளவராக இருப்பதினால் நம்மைச் நேசிக்கின்றார்.

இவ்வுலக சிநேகிதர்கள் ஐசுவரியனாய் இருக்கின்ற மனிதர்களை
தரித்திரர்களாக்கி விடக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றது.
கெட்ட நண்பர்களால்
ஆஸ்தியும் அந்தஸ்தயும் இழந்து தரித்திரரான அநேகர் நம்மை சுற்றி உண்டு,ஆனால் நம்முடைய பரலோக சிநேகிதராகிய இயேசு, நம்மை ஐசுவரியவான்களாக்கும் படியாக
அவர் தரித்திரர் ஆனார்.(2 கொரி 8:9)

நல்ல ஆரோக்கியமாய் இருக்கின்ற மனிதனை கூட,ஒரு சில சிநேகிதர்கள்
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி,
அவனை நோயாளி ஆகக் கூடிய சூழ்நிலைகள் இங்கு காணப்படுகின்றன,
ஆனால் நம்முடைய ஆருயிர் சிநேகிதராகிய,இயேசு கிறிஸ்து நம்முடைய பலவீனங்களையும்,நம்முடைய நோய்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு கல்வாரி சிலுவை சுமந்து தீர்த்தார்.
நம்மை குணமாக்கும் படி அவர் நம்முடைய வியாதிகளை தன்மீது ஏற்றுக்கொண்டார்
அவருடைய காயங்களால் இன்று நாம் குணமாகி இருக்கிறோம் (ஏசா 53:4-5)
(மத் 8:17) (1பேது 2:24)

நம்மோடு வாழ்கிற உறவுகள்,நம்மோடு இருக்கிற நண்பர்கள்,நம்மோடு பயணிக்கிற சிநேகிதர்கள்
மரணத்தினாலோ (அல்லது) வேறு ஏதாவது சந்தர்ப்பத்தினாலோ நம்மைவிட்டு பாதியிலே பிரிந்து போகக்கூடிய நிலைமைகள் இந்த பூமியிலே இருக்கின்றது,அவர்கள்
எல்லா நாட்களிலும்  நம்மோடு கூட
இருக்க முடியாது,ஆனால் நம்முடைய நித்திய உறவும் நித்திய சிநேகிதருமாகிய இயேசு கிறிஸ்து,உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நம்மோடுகூடவே இருக்கிறார்
(மத்தேயு 28:20)

(யாக்கோபு 2:23) இல் நாம் படிக்கிறோம்,
ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்,
அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
இன்று ஆபிரகாமின் சந்ததி ஆகிய
நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் நாமும்
தேவனுடைய சிநேகிதர்களாய் இருக்கின்றோம்,பிதா நம்மைச் சிநேகிக்கிறார்.(யோவான் 16:27)

கட்டாயத்தின் அடிப்படையில்
அல்ல,(ஓசியா 14:4-6) சொல்கிறது
இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிப்பதினால்,தேவன் நம்மை மனப்பூர்வமாய் சிநேகிக்கின்றார், அதனால் நம்முடைய சீர்கேட்டையெல்லாம் குணமாக்கி இருக்கின்றார், நம் மேலிருந்த
அவருடைய கோபம் நீங்கி போயிற்று,
இன்று தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலர்களாகிய நமக்கு
அதாவது கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமாகிய நமக்கு (உபாகமம் 33:29)
பனியை போல் இருக்கின்றார்
(அதாவது) நம் மீது தயவாய்
இருக்கின்றார், பனி என்பது
தயவை குறிக்கின்றது (நீதி19:12)

எனவே நாம் லீலிப் புஷ்பத்தைப்போல் மகிழ்ச்சியாய் மலருவோம்;
லீபனோனின் மரம் போல் அசையாமல் வேரூன்றி நிற்போம்,நம்முடைய வாழ்க்கை,ஆவிக்குரிய ஜீவியம்,
குடும்பம்,ஊழியம் பொருளாதாரம்
பிள்ளைகளின் எதிர்காலம் ஆகிய 
நம்முடைய அனைத்து கிளைகளும்
ஓங்கிப் படரும்,நம்முடைய
அலங்காரம் (பரிசுத்த அலங்காரம்/சங்:29:2) ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும்,
நம்முடைய வாசனை
(தேவனை அறிகிற அறிவு/2கொரி 2:14)
லீபனோனுடைய வாசனையை
போலவும் இருக்கும், இந்த பாக்கியங்களுக்கு எல்லாம்
காரணம் இயேசு நம்மை
சிநேகிப்பதுதான், அவருடைய
சிநேகம் எவ்வளவு உண்மையானது
தெரியுமா?

நமக்கு ஒரு வாதையும் பிரச்சினையும் வந்து விட்டால்,நம்முடைய நண்பர்களும் சிநேகிதர்களும் நம்மை விட்டு விலகி விடுவார்கள்,நம் உறவினர்களும்,
இனத்தாரும் நம்மோடு கூட இருக்கமாட்டார்கள் (சங்கீதம் 38:11)
இது எதார்த்தமான உண்மைதான்,
ஆனால் நம்முடைய சினேகிதராகிய, இயேசு கிறிஸ்து நம்மோடு கூடவே எப்பொழுதும் இருக்கின்றார் வாதையோ,பிரச்சனையோ போராட்டமோ எதுவாக இருந்தாலும் அவர் நம்மை விட்டு விலகாமலும்,அவர் நம்மை கை
விடாமலும் இருக்கின்றார்,
(உபா 31:6,8)(யோசு 1:5)(எபி 13:5)

அதுமட்டுமல்ல,தேவனோடு சஞ்சரித்த,தேவனோடு நடந்த
தேவனுக்கு பிரியமாயிருந்த,
ஏனோக்கை தேவன் எப்படி
மரணத்தைக் காணாமல்
உயிரோடு எடுத்துக் கொண்டாரோ
(ஆதி 5:24)(எபி 11:5) அதேபோல
அவரோடு சஞ்சரிக்கின்ற,
அவரோடு நடக்கின்ற அவரால்
சிநேகிக்கப்படுகின்ற,
நம்மையும் அவர் அவருடைய
வருகையில் எடுத்துக் கொள்வார்
(யோவா 14:3)(2தெச 2:1)
(1தெச 4:17)

மரித்துப்போன தன்னுடைய சிநேகிதனான லாசருவை இயேசு உயிரோடு எழுப்பினார்
(யோவான் 11:11,43-44)
ஒருவேளை இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு முன்பாக நாம் மரித்தோம் என்றால், அவருடைய சினேகிதர்களாகிய,நம்மையும்
அவர் உயிரோடு எழுப்புவார்
(யோவா 6:44)(1கொரி 6:14)
(2கொரி 4:14)

ஆம் எனக்கு அன்பான சகோதர சகோதரிகளே! நாம் யாரை அதிகமாக
சிநேகிக்கிறோமோ,அவர்களோடு அதிக நேரம் செலவிடவேண்டுமென்று,
நாம் விரும்புவோம் ஆசைப்படுவோம்,
இயேசு உங்களை மிகவும் அதிகமாய் சிநேகிக்கிறார்,நீங்களும் அவரை அதிகமாய் சிநேகிக்கிறீர்களா?
அவரோடு அதிகநேரம் உறவாடுங்கள் அவரோடு அதிகநேரம் ஐக்கியம் கொள்ளுங்கள், நாம் யாரோடு அதிகமாய் பழகுகிறோமோ,அவருடைய சுபாவம், அவருடைய தன்மைகள் எல்லாம், நம்முடையதாக மாறிவிடும்,
தேவன் நம்மை முன்குறித்ததற்கான  காரணம்,தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின்,சாயலைப் போல் நாம் முழுமையாக மாறுவதற்கு என்று
வேதம் சொல்கிறது (ரோம 8:29) (ரோம12:2)(பிலி 2:5) எனவே நம்முடைய ஆத்ம நேசரும்,உற்ற சிநேகிதரும்,
நம்முடைய மூத்த சகோதரனும்,
நமது மனவாளனுமாகிய,இயேசு கிறிஸ்துவினிடத்தில்,அதிகமாய் உறவாடுவோம்,அவரைப்போல் நாம் மாறுவோம்.

நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.
(யோபு 22:21)

ஆமென்... அல்லேலூயா...

*********************************

கவனத்திற்கு:

நான் உங்களுக்குக் கற்பிக்கிற
யாவையும் நீங்கள் செய்வீர்களானால்,
என் சிநேகிதராயிருப்பீர்கள்.
(யோவான் 15:14)

நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
(1 யோவான் 5:3)

விபசாரரே,விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
(யாக்கோபு 4:4)

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
(1 யோவான் 2:15-17)

*********************************

Pas.Marvel Jerome
Calvary Living Way Ministries
Mobile number: 9677819582



No comments:

Post a Comment