Thursday 29 July 2021

கொள்ளை நோயினால், உலகமக்கள் அழிந்து போகிறது போல் உன்னதமானவரின் மக்களும் அழிந்து போவதற்கான காரணங்கள் என்ன?

கொள்ளை நோயினால்,
உலகமக்கள் அழிந்து போகிறது போல் உன்னதமானவரின் மக்களும் அழிந்து போவதற்கான காரணங்கள் என்ன?

அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்,அந்தகாரத்திலே நடக்கிறார்கள்;தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம்
அசைகிறது.நீங்கள் தேவர்கள்
என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள்
என்றும் நான் சொல்லியிருந்தேன்.
ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து,லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து
போவீர்கள்.(சங்கீதம் 82:5-7)

சங்கீதம் 82:5-7-ல்... கர்த்தர் தன்னுடைய ஜனங்களைப் பார்த்து சொல்லுகிறார்.....
நீங்கள் தேவர்கள்,உன்னதமானவரின் மக்கள் இதை நீங்கள்,அறியாமலும் உணராமலும் இருந்து அந்தகாரத்தில் நடந்து,உலக மனிதனைப்போல
செத்து,லோகபிரபுக்களின்
ஒருவனைப் போல விழுந்துபோவீர்கள்
(அதாவது) தேவ ஜனங்கள் தாங்கள்
யார் என்பதை,தாங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம்
என்பதை,அறியாமல் உணராமல்
இருந்தால்,அந்தகாரத்தில்
நடந்தால் சாதாரண உலக
மனிதர்களைப்போல,
அவர்களும் மடிந்து போவார்கள்
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இறைமக்கள்,இவ்வுலக மக்களைப்
போல மடிந்து,அழிவதற்கான
காரண காரியங்கள்,இங்கே சொல்லப்பட்டிருக்கிறதை
நாம் பார்க்கின்றோம்,

1) தேவ ஜனங்கள் அறிவில்லாமல் அழிகின்றார்கள்.

2) தேவ ஜனங்கள் அந்தகாரத்தில் நடப்பதினால் அழிகின்றார்கள்.

என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள் (ஓசியா 4:6)

இன்று கொரோனா என்கிற,
கொள்ளை நோயினால்,உலக
ஜனங்கள் செத்துபோகிறது
போல,உன்னதமான தேவனுடைய
ஜனங்களும்,செத்துபோகிறார்கள்,
வியாதியில் விழுந்து நோய்வாய்ப்பட்டு மரிக்கிறார்கள்,பிரியமானவர்களே
நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்,கிறிஸ்துவுக்குள் இருக்கும் நமக்கு உலகத்தாருக்கு நடப்பதுபோல,
நடக்க வேண்டிய அவசியமில்லை
ஏனென்றால்,நாம் உலகத்தார் அல்ல
(யோவா 17:16) கர்த்தர் நமக்கு
வாக்கு கொடுத்திருக்கின்றார்,
என் ஜனங்களுக்கும்,உன்
ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்
(யாத் 8:23) எகிப்தியருக்கு
வரப்பண்ணின வியாதியை
உனக்கு வர பண்ண மாட்டேன்
(யாத் 15:26) உன் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்து,
வியாதியை உன்னை விட்டு
விலக்குவேன்(யாத் 23:25)
பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பேன் (சங் 91:4)
நீடித்த நாட்களால் நானுன்னை திருப்தியாக்கி என் இரட்சிப்பை,
உனக்கு காண்பிப்பேன் (சங் 91:16)
என்று தேவன் நமக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்,இவைகளை
நாம் விசுவாசித்து பெற்றுக் கொள்ள வேண்டும்,நான் உன்னதமானவரின் மறைவிலிருக்கிறேன், சர்வவல்லவருடைய நிழலில்
தங்கி இருக்கிறேன்,என் பக்கத்தில் ஆயிரம்பேரும்,என்  வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும்,
அது என்னை அணுகாது.(சங் 91:1,7)
நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.(சங்118:17)
என்கிற விசுவாசமான நிலையிலே
தேவ ஜனங்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும், விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்கிற வார்த்தையின்படி
(ஆபகூக் 2:4)(எபி 10:38) இந்த
கொள்ளை நோய் காலத்திலே நம்மால், சாகாமல் பிழைத்திருக்க முடியும்.

2) தேவ ஜனங்கள் அந்தகாரத்தில் நடப்பதினால் அழிகின்றார்கள்.

நீதிமான் தன் நீதியைவிட்டுத்திரும்பி, அநியாயஞ்செய்தால்,அவன் அதினால் சாவான்.(எசேக்கியேல் 33:18)

தேவ ஜனங்களுக்கு விசுவாசம்
எவ்வளவு முக்கியமோ, அதேபோல நன்னடத்தையும்,பரிசுத்த வாழ்வும்,
மிகவும் முக்கியம், நாம் இந்த
உலகத்தார் போல வாழக்கூடாது, தேவனுடைய வார்த்தையின்
நாம் படி வாழ வேண்டும்.(ரோம 12:2)
நாம் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறோம்,
(மத் 5:14) எனவே வெளிச்சத்தின்
பிள்ளைகளைப் போல நாம்
நடந்து கொள்ள வேண்டும் (எபே 5:8)
அறிவின்மை,அழிவை  கொடுக்கிறது தங்களுடைய தேவன் யார்
என்பதையும்,தாங்கள் தேவனுடைய சொந்த ஜனங்கள் ஆக இருக்கின்றோம் என்பதையும்,தங்களுடைய சிந்தனை, பேச்சு,நடக்கை,வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் குறித்த சரியான அறிவின்மையால்,தேவ ஜனங்கள் அந்தகாரத்தில் நடந்து, அழிகின்றார்கள்,சங்காரமாகின்றார்கள்.

(ⅰ) நம்முடைய சிந்தனை எப்படி இருக்க வேண்டும்:

கர்த்தருடைய வசனங்களை இரவும் பகலும்,மனதில் வைத்து அசை போட்டுக் கொண்டிருக்கின்ற,தியான சிந்தனை நமக்கு இருக்க வேண்டும் (சங் 1:2) (யோசு1:8) உண்மையான,ஒழுக்கமான நீதியான,கற்புள்ள,அன்பான,
நற்கீர்த்தியான,புண்ணியமான,
புகழான காரியங்களை நாம் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும்
(பிலி 4:8) கிறிஸ்து இயேசுவில் இருந்த அதே சிந்தனை நமக்குள் இருக்க வேண்டும் (பிலி 2:5)(1கொரி 2:16)

(ⅰⅰ) நம்முடைய பேச்சு எப்படி இருக்க வேண்டும்:

கிருபை பொருந்தினதாயும் உப்பால்,
சாரமேறினதாயுமிருக்க வேண்டும்
(கொலோ 4:6)கெட்ட வார்த்தைகளை பேசாமல் கேட்பவர்களின், பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகளை
பேச வேண்டும் (எபே 4:29)
சபிக்கிற வார்த்தைகளை
நாம் பேசக்கூடாது. (யாக் 3:8-12)
அனைவரையும் ஆசீர்வதிக்கிற வார்த்தைகளை,நாம் பேச
வேண்டும் (1பேது 3:9)சகோதரர்கள்,
மீது குற்றம்சாட்டி கொண்டே
இருக்கிற குணம் பிசாசின் குணம்,
அந்த குணம் நமக்கு இருக்க கூடாது.
(வெளி 12:10) மற்றவர்களை குற்றவாளிகள் என்று நாம்
தீர்த்து பேசக்கூடாது (ரோம 14:4)
(மத் 7:1-2) உங்களுக்கு கொடுக்கப்பட்ட
வேலையை,ஊழியத்தை மாத்திரம் செய்து,நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம்
என்று கர்த்தரிடத்தில் தாழ்மையாய் பேசுங்கள்.(லூக்கா 17:10)

இயேசுவை போல,நம்முடைய
வாயிலே வஞ்சனை இல்லாத வார்த்தைகள் காணப்பட
வேண்டும் (1 பேது 2:22)

(ⅰⅰⅰ) நம்முடைய நடக்கை எப்படி
இருக்க வேண்டும்:

நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு
நமக்குள் இருந்த கெட்டுபோகிற
பழைய மனிதனின் சுபாவத்தை களைந்துபோட்டு,கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாக இருக்கிற புதிய மனிதனின் சுபாவத்தை தரித்துக் கொண்டு வாழ வேண்டும்.
(எபே 4:22-24) நம்மை அழைத்த
தேவன் பரிசுத்தராக இருப்பது போல,நாமும் நம்முடைய நடக்கையில் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்(1 பேது 1:15)(2 பேது 3:11)
புறஜாதிகள் முன்பாக தேவனின் மகிமைக்காக,நல்நடத்தை கொண்டவர்களாக நாம்,இருக்க
வேண்டும்.(1 பேது 2:12) போதனையே,இன்றி மற்றவர்களை
இரட்சிக்கப்பட வைக்க கூடிய வகையிலேயே நம்முடைய நடக்கை ஒழுக்கமாகவும்,கற்பு உள்ளதாகவும் இருக்க வேண்டும்.(1 பேது 3:1-2)
நம் நிமித்தம்,சத்தியமார்க்கம், தூசிக்கப்பட்டு விடக்கூடாது
எனவே நாம் நல்நடக்கை கொண்டவர்களாக,இருக்க
வேண்டும்.(2 பேது 2:2) நாம்
அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்துகொள்ள வேண்டும் (எபே 4:1)(அப் 26:17-18)

(ⅰv) நம்முடைய வாழ்க்கை முறை
எப்படி இருக்க வேண்டும்:

நாம் உலகத்தில் இருந்து வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும்
மற்றவர்கள் படும் உபத்திரவத்தில் அவர்களுக்கு உதவி செய்யும்,நற்குணம்
கொண்டவர்களாகவும், நற்கிரியைகளை செய்பவர்களாகவும் (எபே 2:10)
(கொலோ 1:10) உலகத்தால் கறைபடாத தூய்மையான வாழ்க்கை வாழ்கிறவர்களாகவும் நாம்
இருக்க வேண்டும் (யாக்கோபு 1:27)

விபசாரம்,அசுத்தம்,மோகம்,
துர்யிச்சை,விக்கிரகாராதனையான பொருளாசை இவைகள் நமக்குள் காணப்படவும் கூடாது,இவைகளின் பேர்முதலாய் நமக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது,
பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி
நம்முடைய வாழ்க்கை
முறை இருக்க வேண்டும்
(கொலோ 3:5)(எபேசியர் 5:3)

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாத,திருமண வாழ்வு
இருளோடு ஐக்கியம் கொள்ளாத,
சமூக வாழ்வு (2 கொரி 6:14)
விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட
உணவை உண்ணாமை (அப் 15:20)
(1கொரி 10:20) கொண்ட
வித்தியாசமான தேவ
ஜனங்களாக நாம் இருக்க
வேண்டும் (எஸ் 3:8)

எல்லாவற்றிலும் இச்சையடக்கம் கொண்டவர்களாக நாம் இருக்க
வேண்டும், அழிவில்லாத
ஜீவ கிரீடத்தை அடைய,
நம்முடைய சரீரத்தை ஒடுக்கி சுயக்கட்டுப்பாடோடு,நம்முடைய
வாழ்க்கை என்னும் பந்தயத்தில்
ஓட நாம் வேண்டும் (1 கொரி 9:24-27)

ஒளியிலே இருக்கிறேன்,என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும்
இருளிலே இருக்கிறான்,தன் சகோதரனைப் பகைக்கிறவன்
இருளிலே இருந்து இருளிலே
நடக்கிறான்,என்று
வேதம் சொல்கிறது
(1 யோவா2:9-11)
இருளிலே (அதாவது)
அந்தகாரத்திலே
நடக்கிறவர்கள் சாதாரண
உலக மனிதர்களைப்போல,
மடிந்து போவார்கள்
(சங்கீதம் 82:5,7)எனவே
கிறிஸ்துவுக்குள் தேவன்
நம்மை மன்னித்தது போல்
எல்லோரையும் மன்னிப்போம்
(எபே 4:32) வெளிச்சத்தின்
பிள்ளையாய் நடப்போம்
(எபே 5:8)

நாம் தேவனுடைய சாயலில்படி
ரூபத்தின் படி,படைக்கப்பட்ட
தேவர்களாக இருந்தாலும்,
உன்னதமானவரின் மக்களாய் இருந்தாலும்,நமக்கு அறிவில்லாமல் இருந்தால்,அந்தகாரத்தில்
நடந்தால் அழிவு நிச்சயம், உலக மக்களுக்கு நடப்பது போல் நமக்கும் நடக்கும்,ஆனால் நாம் யாரென்கிற
அறிவு,விசுவாச உணர்வு நம்முடைய சிந்தனை, பேச்சு,நடக்கை,வாழ்க்கை
முறை வேதத்தின் படி இருக்கும்
பொழுது,உலக மனிதர்களுக்கு
நடக்கிறது போல் நமக்கு நடக்காது.
நாம் உன்னதமானவரின் மறைவிலிருப்போம்,சர்வவல்லவருடைய நிழலில் தங்கி இருப்போம்,நம்
பக்கத்தில் ஆயிரம்பேரும்,நமது வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது நம்மை
அணுகாது, நம் தேவனாகிய
கர்த்தர் நம்மோடு கூடவே இருப்பார்,எகிப்தியருக்கு
வரப்பண்ணின வியாதியை
நமக்கு வர பண்ண மாட்டார்
நம் அப்பத்தையும் தண்ணீரையும்
ஆசீர்வதித்து,வியாதியை நம்மை
விட்டு விலக்குவார்,பாழாக்கும்
கொள்ளை நோய்க்கு
தப்புவிப்பார்,நீடித்த நாட்களால்
நம்மை திருப்தியாக்கி அவரின் இரட்சிப்பை,நமக்கு காண்பிப்பார்,

இந்த பூமியிலே கொரோனாவோ வேறெந்த,கொள்ளை நோயோ,
பூகம்பமோ நிலநடுக்கமோ,
இயற்கை சீற்றங்களோ
எது வந்து எப்படிப்பட்ட அழிவுகளை ஏற்படுத்தினாலும்,உலக
ஜனங்கள் அழிந்து போகிறது
போல,உன்னதமான தேவனுடைய
ஜனங்களாகிய நாம்,அழிந்து போகிறது இல்லை, நாம் சாவாமல்,பிழைத்திருந்து,
கர்த்தருடைய செய்கைகளை
விவரிக்கிறவர்களாய் நிச்சயமாக இருப்போம்.ஆமென்..அல்லேலூயா..

கர்த்தர்தாமே நீங்கள் வாசித்த
இந்த வார்த்தைகளின்படி,
சிந்திக்க,விசுவாசிக்க,நடக்க
பெலன் தருவாராக.

******************************

Pas.Marvel Jerome
Clw Ministries
Mobile number: 086675 01353

********************************



No comments:

Post a Comment