Tuesday 22 March 2016

#தனித்துவச் செய்தி; #தாழ்மை

இயேசு கிறிஸ்து பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.
(யோவான் 3: 30-31)

பரத்: யோவான் ஸ்நானன்,
யூதர்களுக்கு மனம் திரும்புதலுக்கான  ஞானஸ்நானம் கொடுத்துவந்தவர் யூதர்கள் மத்தியில் ஒரு பிரபல
தீர்க்கதரிசியாக அங்கிகாரம் பெற்றவர்
அப்படிப்பட்ட யோவானின் வாஞ்சையை பாரு பிரவீன், நான் சிறுகவும்
இயேசு கிறிஸ்து பெருகவும் வேண்டும்
என்று வாஞ்சிக்கிறார்.

பிரவீன்: ஆமா தான் ஒரு பிரபல தீர்க்கதரிசியாக இருந்தாலும்,
தான் பூமியிலிருந்து உண்டானவன்
என்பதை அவர் மறக்கவில்லை
உன்னதத்திலிருந்து வந்த இயேசுவே எல்லோரிலும் மேலானவர் என்று அறிக்கையிட்டு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை உயர்த்துகிறார்... இயேசுவின் பாதரட்சையின்
வாரை அவிழ்ப்பதற்கு கூட நான் எனக்கு தகுதி இல்லை என்று சொல்லி தன்னை முற்றிலுமாக தாழ்த்துகிறார்..

பரத்: இன்றய காலத்தில் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக பிரகனடப்படுத்தி காட்டுகிற அனேகர், நான் பெருக வேண்டும்...என் பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும், எங்கள் ஊழியத்தை மட்டுமே மக்கள் வரவேற்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்..

பிரவீன்: பல விசுவாசிகள் கூட தனக்கு புகழ் கிடைக்க வேண்டும்,பாராட்டு கிடைக்க வேண்டும், தன் பெயருக்கு மகிமை உண்டாக வேண்டும் என்று விரும்புகிறார்கள்,சிலர் தன்னை மற்றவர்கள் மத்தியில் நல்லவராக காட்டப்பட வேண்டும் என்பதற்காகவே,பிறர் பார்க்கும்
படி  நன்மைகள் செய்பவர்களாக நடிக்கிறார்கள்..

பரத்: ஆமா இவைகள் எதுவும் இயேசுவின் நமத்திற்கு மகிமைகொண்டுவராது
நம்முடைய ஊழியத்தை மற்றும் வாழ்க்கையை  மற்றவர்கள் பார்க்கும்பொழுது இயேசு கிறிஸ்து அவர்களின் பார்வையில் உயர்ந்திருக்க வேண்டும், அவரின் நாமத்தின் மகிமைக்கு மட்டுமே நாம்மால்  செய்யப்படுகிற செயல்கள் இருக்க வேண்டும்...

பிரவீன்: ஆமா நண்பா நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில்,உலகத்தனமான மனிதர்களிடம் இல்லாத பண்புகளாகிய  தேவ அன்பு, நீடிய பொறுமை, சாந்த குணம், நிதானமான பேச்சு, எதிலும் நேர்மை உண்மை இவைகளை பார்த்து,
கிறிஸ்தவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று  மற்றவர்கள் சாட்சியளிக்க வேண்டும்
அது இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மிகவும் மகிமைப்படுத்தும்..

பரத்: அதோடுகூட,நாம் தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்தி அவரை உயர்த்தினால் அவர் நம்மை உயர்த்துவார்,இதை வேதத்தில் நாம் பல சம்பவங்களில் பார்க்கலாம், குறிப்பாக யோவான் ஸ்நானன் இயேசுவின் பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கு கூட நான் எனக்கு தகுதி இல்லை என்று சொல்லி தன்னை முற்றிலுமாக தாழ்த்துகிறார்
(யோவான் 1: 27) ஆனால் இயேசு யோவான் ஸ்நானனை "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை" என்று அவனை உயர்த்துகிறார் (மத்தேயு 11:11)

பிரவீன்: ஆமா பரத்,நம்மை,நம்முடைய ஊழியத்தை,நம்முடைய செயல்படுகளை மற்றவர்கள் புகழ வேண்டும் என்று நாம் ஒரு துளியளவும் விரும்பக்கூடாது,எல்லா புகழும் தேவனுக்கே போய் சேரவேண்டும் என்றுதான் நாம் விரும்ப வேண்டும்,
நமக்கு உயர்வையும்,மேன்மையையும் தேவன் நிச்சயமாகவே கொடுப்பார்.

ஆமென்... அல்லேலூயா...

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
(கலாத்தியர் 2: 20)

=======================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

நமது அனுதின நற்செய்திகளை எல்லோருக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு
Send Message Via Whatsapp
“Need Daily Good News  ”
to +917092 377669





No comments:

Post a Comment