Friday 25 March 2016

#தனித்துவச்செய்தி

# இயேசு கிறிஸ்து சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள்: #பாகம்-2

#தொடர்ச்சி

ஜேம்ஸ்: Hi, பீட்டர்...

பீட்டர்: வா, ஜேம்ஸ்... இப்பதான் உனக்கு Call பண்ணலாமுன்னு நெனச்சேன் நீயே வந்துட்ட !

ஜேம்ஸ்: Oh!  அப்படியா ! பீட்டர், சரி, நாம் மதியம் இயேசு கிறிஸ்து சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள் பற்றி  பேசிகிட்டு இருந்தோம் நீயும் இயேசு சிலுவையில் சொன்ன முதல் நான்கு வாசகங்களை பற்றி Explain பண்ண அது எனக்கு ரொம்ப Useful ல இருந்தது
மீதமுள்ள மூன்று வாசகத்தை பற்றிய விளக்கத்தை இப்ப சொல்றயா

பீட்டர்: O yes, சொல்றேன் அதுக்காக தான உன்ன Evening வர சொன்னேன்
OK continue பண்ணுவோம்...
5)“தாகமாயிருக்கிறேன்”
(யோவான்19:28) இங்கே இயேசு வேத வாக்கியம் நிறைவேறத்தக்கதாக
“தாகமாயிருக்கிறேன்” என்கிறார் அதாவது பழைய ஏற்பாட்டிலே
“என் நாவு மேல்வாயோடே
ஒட்டிக்கொண்டது” (சங் 22:15),
“என் தாகத்துக்குக் காடியைக்
குடிக்கக்கொடுத்தார்கள்” (சங் 69:21)
என்று சிலுவையைக் குறித்து
ஏற்கனவே தீர்க்கதரிசனங்கள்
சொல்லப்பட்டிருக்கின்றன.இந்த தாகம் சாதாரணமான தாகமல்ல என்றும், அக்கினியின் மத்தியில் இருக்கிற ஒரு மனிதனுக்கு ஏற்படும் மரண தாகம் போன்றது என்றும் வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது இயேசு அனுபவித்த நரக வேதனையைக் குறிக்கிறது.

#"மனிதனுக்காக அவனுடைய நரக வேதனையை இவர் அனுபவித்தார். எந்த ஒரு மனிதனும் ஒருபோதும் நரக வேதனையை அனுபவிக்கக் கூடாது
என்பதற்காகத்தான் இவர் அந்த வேதனையை ஏற்றுக்கொண்டார்"
நாம் எல்லோரும் பரலோக இன்பத்தை அனுபவிப்பது மட்டுமே கடவுளுடைய
விருப்பம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும் தாகமாக இருந்த அவர் புளித்த காடியைக் குடிக்க
வாங்கிக்கொண்டது நம்மீது
தலைமுறை தலைமுறையாகத்
தொடர்ந்து வந்துகொண்டிருந்த
சாபங்களை அவர் அகற்றிவிட்டார்
என்பதைக் காட்டுகிறது.

ஜேம்ஸ்: எப்படி சொல்ற ?

பீட்டர்: முன்னோர் செய்த பாவத்தின் பலனை நாங்கள் இன்றைக்கு அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்
என்பதை எடுத்துக்காட்ட........

“பிதாக்கள் திரட்சக் காய்களைத் தின்றார்கள்,பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின” என்று அந்தக் காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. இந்த பழமொழி ஒருநாள்
இல்லாமல் போகும் என்று பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே கடவுள்
சொல்லியிருந்தார்.(எரேமியா 31: 29)

ஜேம்ஸ்: Oh! அப்படியா !

பீட்டர்: அடுத்த வாசகம் 6)“முடிந்தது”
(யோவான் 19:30)
இது கிரேக்க மொழியில் ‘டெட்டெலெஸ்டாய்’ என்ற வார்த்தையைத்தான் தமிழில் ‘முடிந்தது’ என்று  மொழிபெயர்த்திருக்கிறார்கள்
அந்தக் காலத்தில் நிலத்தையோ, ஒரு
விலையேறப்பெற்ற பொருளையோ வாங்கும்போது,அதற்கான முழுக் கிரயமும் செலுத்தப்பட்டுவிட்டது என்பதைக்காட்ட‘டெட்டெலெஸ்டாய்’
என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். அதாவது, இந்தக்காலத்தில் ரசீதுகளில் ‘PAID’ என்று முத்திரை குத்துவதுபோல, அந்த
வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.

ஆகவே இயேசு சிலுவையில்
தொங்கின போது ‘முடிந்தது’
என்று சொன்னது நமது பாவ
மன்னிப்பிற்கான முழுக் கிரயத்தையும் அவர் செலுத்திவிட்டார் என்பதைக்
காட்டுகிறது.‘முடிந்தது’ என்கிற அந்த ஒரு வார்த்தையில் பல காரியங்கள்
அடங்கியிருக்கின்றன.

ஜேம்ஸ்: என்னென்ன காரியங்கள் ?

பீட்டர்:
(i) கல்வாரி சிலுவையைக் குறித்து கடவுள் திட்டமிட்டு முன்னறிவித்திருந்த எல்லாம் நிறைவேறி முடிந்தது.

(ii) பழைய ஏற்பாட்டில்
அவருடைய பாடுகளைக் குறித்து சொல்லப்பட்ட அத்தனை காரியங்களும் நிறைவேறி முடிந்தது.

(iii) உலகத்தின் பாவம் தீர்ந்தது,
முடிந்தது. அதாவது, பாவம் இனி ஒரு பிரச்சனையல்ல. ஏனென்றால் அதற்குப் பரிகாரம் வந்து விட்டது.எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தீர்வு
வந்ததுபோல மனுக் குலத்தின் பாவவியாதிக்கும் தீர்வு வந்துவிட்டது.

(iv) இயேசு ஆவி, ஆத்துமா, சரீரத்தில்பட்ட பாடுகள் முடிந்தது.

(v) இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது.

(vi) மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.

ஜேம்ஸ்: ஏழாவது வாசகம் 7 )“பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46)

பீட்டர்: ஆமா, இயேசு தன் ஜீவன் போகிற வேளையில் மகாசத்தமாய்க் கூப்பிட்டு இப்படிச்சொன்னார். இயேசு தம்முடைய பெலன், சக்தி எல்லாவற்றையும்
சிலுவையில் இழந்து ஒன்றும் செய்ய இயலாதவராய் மரணம்
அடையவில்லை.அதாவது, அவர்கள்

# இயேசுவை கொலைசெய்ததினால் அவர் மரிக்கவில்லை அவர் ஜீவாதிபதி ஜீவனைக் கொடுக்கிறவர்
அவரிடமிருந்து யாரும் ஜீவனை எடுக்க
முடியாது

#அவரே அதைக் கொடுத்தால்தான் உண்டு. ஆகவே, அவரே அதை
ஒப்புக்கொடுக்கிறார். அவர்
தலையை சாய்த்து, ஆவியை
ஒப்புக்கொடுத்தார்.

பொதுவாகச் சிலுவையில்
மரிப்பவர்கள் உயிர்போகும் நேரத்தில் மூச்சு விட முடியாமல் திணறி, தலையை நன்றாகத் தூக்கி, மூச்சு விட முயற்சிப்பார்களாம். மூச்சு விட முடியாமல், உயிர்போன பிறகு தலை
தொங்குமாம்.

ஜேம்ஸ்: அப்படியா ?

பீட்டர்: ஆமா, ஆனால் இயேசுவோ, தலையைச் சாய்த்து, பிறகு தம்
ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

#அவர்கள் சாகடித்ததால் அவர்
சாகவில்லை. அவரே தம் ஜீவனைஒப்புக்கொடுத்தார்
என்பதை இந்த வாசகம் நமக்கு  காட்டுகிறது.

இயேசுவின் சிலுவை மரணம் கடவுள் காலகாலமாய்த் திட்டமிட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடப்பித்த ஒரு சரித்திரச்
சம்பவம் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்

ஜேம்ஸ்: Thank you நண்பா கல்வாரி சிலுவையில் இயேசு சொன்ன ஏழு வசனங்களையும் அதன் விளங்கங்களையும் ரொம்ப நல்ல Explain பண்ண... ரொம்ப பிரயோஜனமா இருந்தது....

பீட்டர்: All glory to Jesus alone, அவரின் சத்திய ஆவியானவர்தான் நமக்கு இந்த சத்தியங்களை விளக்கி சொன்னார்
சரி நண்பா நாம இன்னோரு நாள் மறுபடியும் சந்திப்போம்

ஜேம்ஸ்: OK டா  Bye, மறுபடியும் ஒருநாள் Meet பண்ணுவோம்....


ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

நமது அனுதின நற்செய்திகளை எல்லோருக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு
Send Message Via WhatsApp
“Need Daily Good News  ”
to +917092 377669

No comments:

Post a Comment