Wednesday 20 January 2016




#Exclusive

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும்,சாத்தானின் தந்திரங்களும்

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
(வெளி 22: 12)

ஜான்: இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றி பரிசுத்த வேதாகமம் தெளிவாய் போதிக்கிறது,

பீட்டர்: ஆமா இரண்டாம், வருகைக்கு முன்பு நடக்க போகிற கரியங்கள் என சொல்லப்பட்ட விஷயங்கள்,வேதத்தின் படி நடந்துகிட்டு தான் இருக்கு...

ஜான்: அதுமட்டுமல்ல ஜான்,
கடவுளை பற்றிய உண்மையான வேதாகம உபதேசத்தை திசைமாற்ற,சாத்தான் பல்வேறு மதங்களை உண்டாக்கி மக்களை  வஞ்சித்துக்கொண்டு எப்படி, இருக்கிறானோ அதேபோல,இயேசுவின் இரண்டாம் வருகையின் உண்மைத்துவத்தை மறைப்பதற்கு சாத்தான் மக்களுக்குள் பொய்யான உபதேசங்களை பரப்பி அதை நம்ப வைத்துகொண்டும் இருக்கிறான்.....

பீட்டர்: ஆமா பீட்டர்,பௌத்த மதத்து மக்கள், "மைத்திரேயர்" என்னும் வருங்கால புத்தர் உலகத்தில் அவதரிக்கப்போவதாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். "மைத்திரேயர்"வந்து மக்களுக்கு தர்மத்தை போதித்திப்பார் என்று நம்புகிறார்கள்

ஜான்: இந்து மதத்தில் விஷ்ணு என்பவர் "கல்கி"-யாக தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார்
என்று நம்புகிறார்கள்.

பீட்டர்: அதேபோல் இஸ்லாமிய மக்கள் "ஈஷா நபி" என்பவர் இறுதி நாள்களில் மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்புவார்,
"வழிகாட்டப்பட்டவர்" (மாதி [மாக்தி] Mahdi) என்பவரோடு இணைந்துகொண்டு "போலி மெசியா"வை எதிர்த்து முறியடிப்பார் என்று நம்புகின்றார்கள்.

ஜான்: அதோடுகூட,யூதர்கள் இன்னம் கிறிஸ்துவின் முதல் வருகை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பீட்டர்: கத்தோலிக்க மக்கள்,
இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை விசுவாசிக்கிறார்கள்,
ஆனால் இயேசு போதிக்காத,
வேதத்தில் இல்லாத உபதேசங்களையும்,போதனைகளையும் நம்பிக்கொண்டு வாழ்கிறார்கள்.

ஜான்: ஆமா பீட்டர்,தேவனுடைய வார்த்தையில் இல்லாத காரியங்களை,
சாத்தான் நம்பவைக்கிறான்,அந்த நம்பிக்கைக்கு "உருவம்" கொடுக்க,ஒளியின் வேடம் தரித்துக்கொண்டு வருகிறான் (2கொரி11: 14)

பீட்டர்:இப்படி உலகம் முழுதும் சாத்தனின் பொய் உபதேசத்தாலும்,பொய்யான எதிர்பார்ப்புகளாலும்  நிறைந்திருக்கும்,இந்த காலங்களை நாம் கவனிக்கும் போது, நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிகவும் சமீபமாக இருப்பதை நாம் நன்கு உணரமுடிகிறது.

ஜான்: இப்படி எல்லாம் அறிந்திருந்தும்  மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்காமல்,பொய் உபதேசங்களை தோலுறித்து காட்டாமல், போலி எதிர்பார்ப்புகளை சுட்டிகாட்டி எதிர்காமல்,நமக்கென் வம்பு என்று வாயை மூடிக்கொண்டு எந்த ஒரு உண்மையான கிறிஸ்தவனும் இருக்க மாட்டான்....

பீட்டர்: ஆமா நண்பா,நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர்,நம்மை ஆவியில் அனலாக்கி கொண்டிருக்கிறாரே..அப்பரம்
நம்மால் எப்படி சும்மா இருக்க முடியும்,

ஜான்: கர்த்தருடைய ஆவியானவர் இன்னும் வல்லமையாய் நம்மைக்கொண்டு செயல்படுவார்,நாம் அவரின் ஆளுகையை நமக்குள் அனுமதிப்போம்.
கர்த்தருடைய வருகை மிகவும் அருகில் இருக்கிறது,அவரை சந்திக்க நாம் ஆயத்தமானது போல்,மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

ஆமென்... அல்லேலூயா...

இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.

(வெளி 1: 7)

செய்தி : ஜீவ வழியிலிருந்து சகோ:பரத்

====================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

No comments:

Post a Comment