#Exclusive
"மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்".
(லூக்கா 4:4)
பரத்: தேவன் தம் பிள்ளைகளுக்கு பெலனான உணவாக தேவ வசனத்தைக் கொடுக்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் இருந்த போது,தேவன் அவர்கள் புசிக்கும் படிக்கு மன்னாவை அளித்தார்,
அது பசியோடு பெலன் இல்லாது இருந்த அவர்களை பெலன்கொள்ள செய்தது..பிலயாம் பரவிக்கிடந்த இஸ்ரவேலின் பாளயத்தைக் கண்டு தீர்க்கதரிசனமாக......... ‘காண்டாமிருகத்திற்கு ஒத்த பெலன் அவர்களுக்கு உண்டு’ என்று உரைத்தான் (எண்ணாகமம் 23:22).
பிரவீன்: ஆமா,எலியா தீர்க்கதரிசி,
தேவ தூதன் அளித்த உணவை உண்டு ‘அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதம் மட்டும் நடந்து போனான்’ (1 இராஜாக்கள் 19:8).
பரத்: தேவன் அருளும் உணவு அது நமக்கும் காண்டாமிருகத்தின் பெலனை தருகிறது. அன்று இஸ்ரவேல் ஜனங்கள் கானானை சுதந்தரித்து கொள்ள தடையாக 38 இராஜாக்கள்
(யோசுவா 12:24) எதிர்த்து நின்றார்கள். அவர்களில் இராட்சதர்களும் அடக்கம். ஆனால்,தேவ ஜனங்களுக்கு முன்பாக அவர்களால், நிலை நிற்க முடியவில்லை, எல்லாரும் சங்காரமானார்கள்.
பிரவீன்: இன்றைக்கும் தேவ பிள்ளைகளாகிய நமக்கும் யுத்தம் உண்டு. நமக்கு எதிராக இராட்சதர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்.பவுல் அப்போஸ்தலன் இதைக்குறித்து எழுதும் போது இவ்வண்ணமாக கூறுகிறார்.........
"ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு".
(எபேசியர் 6: 12)
பரத்: ஆமா இந்த பிரபஞ்சத்தின் பொல்லாத ஆவிகளோடு எதிர்த்து நிற்க நமது மாம்ச பலம் ஒரு சதவீதம் கூட உதவாது, அதற்கு ஆவிக்குரிய பெலன் வேண்டும்.
பிரவீன்: மேலும் மாம்ச பெலம் அவிக்குரிய பலத்திற்கு முன் நில்லாது என்பதை விளங்கப்பண்ணும்படி ஆண்டவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் இவ்வாறு உரைத்தார்,
"எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே"
(ஏசாயா 31: 3)
பரத்: ஆமா ஆவியாக இருக்கிற கர்த்தரை விட்டு,அவருடைய பெலனில் பெலனடையாமல், தன் சொந்த மாம்ச பெலத்தையோ, மற்ற மனிதருடைய பெலத்தையோ நாம் நாடுவோமானால் நாம் ஆவிக்குரிய போராட்டத்தில் தோற்றுப்போய்விடுவோம்.
கிறிஸ்துவுக்குள் புதிதாய் பிறந்த நம்மை,ஆவிக்குரிய வளர்ச்சியில், பெலத்தில் பெருக செய்ய,
தேவனுடைய வசனங்களை ஆவிக்குரிய போஜனமாக எடுத்துக்கொள்ள,நாம் அனுதினமும் வாஞ்சையோடு இருக்க வேண்டும்
இதைத்தான் வேதமும் போதிக்கிறது.
"நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்".
(1பேதுரு 2: 3)
பிரவீன்: ஆமா நண்பா! நாம்,நம் சரீரத்துக்காக,அன்றாடம் உட்கொள்ளும் உணவினால் மட்டுமல்ல,தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்போம்.. தேவனுடைய வசனத்தின் மீது கொண்ட விசுவாசத்தில் நிலைப்போம்,
வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளை, தேவன் நமக்கு அருளிய ஆவியின் பெலத்தால் ஜெயிப்போம்.
ஆமென்... அல்லேலூயா...
===================
ஜீவ வழி -LIVING WAY
www.facebook.com/lwcomm
marveljerome.blogspot.in
நமது அனுதின நற்செய்திகளை எல்லோருக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு
Send Message Via Whatsapp
“Need Daily Good News ”
No comments:
Post a Comment