Wednesday 13 January 2016

தேவனை தேடு

Exclusive

ஜான்: நாம் தேவனைத் தேட வேண்டும்,அவருடைய வார்த்தைகளை ஆர்வமாய் நாட வேண்டும்....

விக்டர்: நானுமா ? நல்ல காமெடி ஜான்,நானே வாழ்க்கையில வாழ்றதுக்கு வழியவே இன்னம் கண்டுபிடிக்க முடியாம திரிந்துகிட்டு இருக்கேன்... நான் போய் தேவனை தேடுவா ?

ஜான்: ஆமா நண்பா, ஒவ்வொரு மனிதனும் தேவனை தேட வேண்டும்,அவரை அறிந்துகொண்டு அவரோடு நெருக்கிய ஐக்கியம் கொண்டு வாழ வேண்டும் அதுதான் மனித வாழ்வின் பிரதான நோக்கம்,அவற்றை நீ செய்தால் என்ன விக்டர் ?

விக்டர்: உனக்கெல்லம் என்ன தெரியும் ஜான், என் வாழ்க்கை வறுமையால் நெறஞ்சு இருக்கு, கடன் தொல்ல, குடும்ப பிரச்சனை, பொருளாதார தேவைகளை என எல்லாம் எங்கள சூழ்ந்து இருக்கு, கையில பணமே நிக்க
மாட்டிங்கிது...ஜான்,ஒரு சில நேரத்துல பட்டினியா இருக்க வேண்டிய நிலை கூட வருது... இதலாம் அந்த ஆண்டவரு  தெரியாதா ?

ஜான்: சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத்தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது'.சங்.34:10ல் எழுதியிருக்கு நீ மொத கர்த்தரை தேடு,விக்டர்.. அப்பரம் உனக்கு என்ன தேவை என்பதை, நம்முடைய பரமபிதா ஏற்கனவே அறிந்திருக்கிறார்' (மத்.6:8).
நீ அவரை அறிந்திருக்கிறாயா ? அவரை அறிந்திருந்தால் நீ இப்படி பேச மாட்ட

விக்டர்: ஆமா ஜான்....

ஜான்: நம்மை படைத்து தேவன்,
அவர் வார்த்தையாகவே இருக்கிறார் உன்னுடைய தேவைகளை சந்திக்கிற தேவனாகவும் இருக்கிறார், விசுவாசத்தோடு பேசு

விக்டர்: ம்ம்ம்.....

ஜான்: உனக்கும் உன் குடும்பத்திற்கும் என்ன என்ன தேவைகள் உண்டோ அவைகள் அனைத்தையும் நிச்சயம் நீங்கள் பெற்றுக் கொள்வீ்ர்கள்,
நீ மொத தேவனைத் தேடு,அவர் அறிகிற அறிவை வேதத்தின் மூலம் வளர்த்துக்கொள்.

மரியதாஸ்: ஓகே... நண்பா எப்படி வளர்த்துக்கொள்வது ?

ஜான்:  ஒவ்வொரு நாளையும் நீ துவக்கும் போது தேவனோடு நீ துவக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான காரியம்.....

விக்டர்: ஆனா காலையில் எழுந்தவுடன் என் கண்ணுக்கு முன்னாடி என் பிரச்சினைகளும், தேவைகளும், பாரங்களுமே வந்து நிக்குது ஜான்.

ஜான்: அந்த சிந்தனைகளை கண்முன் நிறுத்தாதே, ஆவியாய் இருக்கிற ஆண்டவரை உன் கண்முன் நிறுத்து  அவருக்கு முக்கியத்துவம் கொடு். வேதத்தை வாசி, வேத வசனத்திலிருந்து ஆண்டவர் உங்களோடு என்ன பேசுவார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். பிறகு ஜெபம்பண்ணி அந்த நாளுக்குரிய சகல காரியங்களுக்காக அவரை ஸ்தோத்தரி, அதன் பிறகு உன்  தேவைகளை, விண்ணப்பங்களை தேவனுக்குத் தெரியப்படுத்து நிச்சயம் உன் ஜெபத்திற்கு ஆண்டவர்  பதில் கொடுப்பார். உன் தேவைகள் கட்டாயம் சந்திக்கப்படும். அவிசுவாசமாய் பேசாதே ஓகேவா ?

விக்டர்: ஓகே... ஜான் நீ சொன்னவாறே நாளை முதல் செய்ய ஆரம்பிக்கிறேன்,நன்றி....

ஜான்: கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்....

===================
கவலையான,பிரச்சனையான சிந்தனைகளை கண்முன் நிறுத்தாதே, உன் பிரச்சனைக்கு தீர்வாய் இருக்கிற, கர்த்தருடைய வார்த்தைகளை கண்முன் நிறுத்து...

மற்றவர்கள் உன்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள்,என்பதில் நீ உன் கவனத்தை செலுத்ததே...
ஆண்டவருடைய வார்த்தை உன்னைப்பற்றி என்ன சொல்கிறதோ அதில் நீ கவனத்தை செலுத்து...
===================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

No comments:

Post a Comment