Friday 16 April 2021

#இயேசு #கிறிஸ்துவின் #இரகசிய #வருகையும்,#பகிரங்க #வருகையும் (பாகம் 1)

 #இயேசு #கிறிஸ்துவின் #இரகசிய #வருகையும்,#பகிரங்க #வருகையும்


ரமேஷ்: இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை மற்றும்,பகிரங்க வருகையை குறித்து,இறைமக்கள் மத்தியில் ஒரு சரியான புரிதல் இல்லாமல் இருக்கின்றது.


சுரேஷ்: ஆமா நண்பா ஒரு சில 

மக்கள் இரகசிய வருகை இல்லை, இயேசுவின் பகிரங்கமான இரண்டாம் வருகை மட்டுமே உண்டு என்கிறார்கள். ஒரு சில மக்கள் இரகசிய வருகை முடிந்து விட்டது என்கிறார்கள்,ஒரு சில மக்கள் உபத்திரவ காலத்திற்குப் பிறகுதான் இரகசிய வருகை வரும் என்கிறார்கள்.


ரமேஷ்: அது அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை நண்பா! ஆனால் நமது நம்பிக்கை வேதாகமத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதுதான் சரியான நம்பிக்கை.


சுரேஷ்: ஆம் நண்பா வேதத்தின்படி இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையையும்,அவருடைய பகிரங்க வருகையையும் நாம் நம்புகின்றோம்.

ஏனோக்கு மரணத்தை காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்டது, விசுவாசிகள் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையின் போது உயிரோடு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான முன் அடையாளம் (எபி:11:5) 

இரகசிய வருகை இருக்கிறது,

ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால்,இரகசிய வருகை என்பது உபத்திரவ காலத்திற்கு முன்பா அல்லது பின்பா எப்பொழுது நடக்கப் போகிறது ? இதற்கு எனக்கு வசனத்தின் அடிப்படையில் நீ விளக்கம் தேவை நண்பா... 


ரமேஷ்: விளக்கம் தருகின்றேன்... இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை என்பது உபத்திரவ காலத்திற்கு முன்பு நடக்கப்போற 

ஒரு காரியம், உபத்திரவ காலம் வருவதற்கு முன்பே,இயேசு வந்து நம்மை அவரோடு சேர்த்துக் கொள்வார் (யோவான் 14:3)

(2 தெசலோ2:1)


சுரேஷ் : ஓ! அதனாலதான் அப்.பவுல் 

இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையை குறித்து எழுதும் போது 

1 தெசலோ 1:10-ல் இவ்வாறாக எழுதுகிறாரா? "இனிவரும் கோபாக்கினையினின்று 

நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்" என்று...


ரமேஷ்: ஆமா நண்பா அது மட்டும் கிடையாது "பிலதெல்பியா"சபைக்கு ஆவியானவர் சொல்லும்பொழுது இவ்விதமாக சொல்கின்றார்..

வெளி 3:10-ல் "என் பொறுமையைக்குறித்துச் 

சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், 

பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்" என்று....ஆக சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகுதான் கோபாக்கினையின் காலம் (1 தெசலோ 1:10) சோதனையின் காலம்(வெளி 3:10) அதாவது உபத்திரவ காலம்,இந்த பூமியிலே ஆரம்பமாகும்.. 


சுரேஷ்: ஓ அதனாலதான்  வெளிப்படுத்தின விசேஷதத்தில் 4-ஆம் அதிகாரம் முதல் 18-ஆம் அதிகாரம் வரை சபை என்கிற வார்த்தையே இல்லையா ? 


ரமேஷ்: ஆமா நண்பா! 

வெளிப்படுத்தின விசேஷதத்தில் 4-ஆம் அதிகாரம் முதல் 18-ஆம் அதிகாரம் வரை,சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு உபத்திரவ காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை பற்றியதாய் இருக்கிறது.இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட சபையின் ஜனங்கள்,பரலோகத்தில் இருக்கிறதையும்,புதிய பாட்டை பாடுவதையும் நாம் (வெளி 5:9-10)-ல் நாம் பார்க்கிறோமே!


சுரேஷ்: இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கும், இயேசு கிறிஸ்துவின் பகிரங்க இரண்டாம் வருகைக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை சுருக்கமாக சொல்லு நண்பா ! 


ரமேஷ்: சொல்கிறேன் கேள் நண்பா ! 


1) இரகசிய வருகையில்,இயேசு கிறிஸ்து பரிசுத்தவான்களுக்காக வருவார் (1தெச 4:16-17)


இரண்டாம் வருகையிலேயே,இயேசு கிறிஸ்துவை பரிசுத்தவான்களோடு  வருவார் (யூதா 1:15) 


2) இரகசிய வருகை என்பது பூமியிலிருந்து பரிசுத்தவான்கள் வானத்துக்கு எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி (மத் 24:27,30,40,41) 

(1தெச 4:14,16,17)


இரண்டாம் வருகை என்பது பரிசுத்தவான்களோடு, இயேசு கிறிஸ்து பூமிக்கு வரும் நிகழ்ச்சி

(சகரியா :14:4-5) (யூதா 1:15) 


3) இரகசிய வருகை இமைப்பொழுதில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி (1கொரி 15-51)(மத் 24-27)


இரண்டாம் வருகை பல மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சி (வெளி 19:11-14) 

(மத் 24:30)


4) இரகசிய வருகையில் சாத்தான் கட்டிவைக்கப்படுவதில்லை,இரண்டாம் வருகையில் சாத்தான் கட்டி வைக்கப்படுவான் (வெளி 20:2)


இரகசிய வருகையில் இயேசுகிறிஸ்து மணவாளனாக வருவார் (மத் 25:6)


இரண்டாம் வருகையில் இயேசு கிறிஸ்து  நியாயாதிபதியாக 

வருவார் (வெளி 19:11-16 ) 


5) இரகசிய வருகை இரகசியமாக இருக்கும் (1கொரி 15:51) 


இரண்டாம் வருகையை பகிரங்கமாக இருக்கும் (வெளி 1:7) 


சுரேஷ்: போதும் நண்பா! இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கும் பகிரங்க வருகையைக்கும் உள்ள வித்தியாசம் எனக்கு ஓரளவுக்கு புரிஞ்சிடுச்சு... 


ரமேஷ்: இன்னும் நிறைய வேதவசனங்கள் இருக்கு சுரேஷ் 

நான் உனக்கு பிறகு விரிவாக விளக்குகிறேன் 


நன்றி மீண்டும் சந்திப்போம்....



No comments:

Post a Comment